Monday, March 22, 2010

தூய நீரைச் சேகரிக்க உதவும் முப்பரிமாண நனோ துணிக்கைகள்


நீரைத் தூய்தாக்கும் தொழில் நுட்பத்தின் விளைத் திறனை முப்பரிமாண நனோ துணிக்கைகளின் பிரயோகம் அதிகரிக்கின் றது எனக் குறிப்பிடப்படுகிறது. நீரைச் சுத்திகரிக் கும் மென் படையில் நனோ துணிக்கைகளைச் சேர்க்கும் போது அதன் வினைத் திறன் இரு மடங்காவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதே முறை மூலம் உவர் நீரையும் நன்னீராக்கலாம். ஆனால் இம்முறைக்கு சக்தி அதிகம் தேவையா தலால் பணச் செலவும் அதிகமாக இருக்கும். அலுமினோ சிலிக்கேற்று கனியத்திலிருந்து பெறப்படும் நனோ துணிக்கைகள் ஏறத்தாழ 20nm. விட்டத்தையுடையவை. அவை மென் படையுடன் சேர்ந்து மென்படையின் இயல்பு களை மாற்றின.

அதனால் மென் படைகள் ஐதரசன் நாட்ட இயல்புடையனவாகவும் மாற் றப்பட்டன. இதனால் நீர் இலகுவாக வடிகட் டப்பட்டது. நனோ H2O என்ற நிறுவனத்தின் கீழ், கலிபோர்னியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சூழல் பொறியியலாளரான எரிக்ஹோக் என்பவரே இப்புதிய முறைமையைக் கண்டுபிடித்தவராவார்.

2005 ஆம் ஆண்டளவில் ஆய்வு மட்டத்தில் மட்டுமே இருந்த இந்த விடயத்தை 4 ஆண்டுகளின் பின்னர் வர்த்தக மயப்படுத்தும்படி 15 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலிடப்பட்டது.

உற்பத்தியை அதிகரித்து இவ்வருடம் இந்தத் தொழில் நுட்பத்தைச் சந்தைப்படுத்தும் திட்டத்தையும் நனோசி2லி நிறுவனம் கொண்டுள்ளது. பொதுவாக, ஐதரசன் நாட்ட இயல்புடைய பதார்த்தங்கள் மாசுக்களை வடிக்கும் தன்மை குறைவானவையாகக் காணப்படும். இக் குறைபாட்டைத் தவிர்ப்பதற்காக இந் நிறுவனம் ஐதரசன் நாட்ட இயல்புடைய பதார்த்தத்தை உருவாக்காமல் கலப்புப் பதார்த்தமொன்றை உருவாக்கியுள்ளது.

அத்துடன் இந்நிறுவனம் உருவாக்கியிருக்கும் நனோ துணிக்கைகள் முப்பரிமாணக் கட்டமைப்பை உடையவை. இந்தப் புதிய முறைமையை, சாதாரண உற்பத்திச் செயன் முறையுடன் இணைத்துச் செயற்படலாமெனவும் குறிப்பிடப்படுகிறது.

No comments:

Post a Comment