Monday, March 22, 2010

நீரைப் பரிகரிக்க உதவும் சூரிய ஒளி


சுத்தமான குடிநீரைப்பெறுதலே, அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் மிக முக்கியமான பிரச்சினையாகக் காணப்படுகிறது. ஆனால் சிறந்த நீர்பரிகரிப்புத்திட்டங்களையு டைய நகரங்களால் மட்டும் பாதுகாப்பான தூய நீரைச் சிறந்த வழிமுறைகளில் வழங்க முடிகிறது.

நீரைப் பரிகரித்தலொன்றும் இலகுவான காரியமல்ல. அத்துடன் அதற்கான செலவும் மிக அதிகமாகும். இத்தகையதோர் நிலையில் சர்வதேச ஆய்வுக்குழு ஒன்று ஒளி ஊக்கி மூலம் நீரைச் சுத்திகரிக்கும் முறையைக் கண்டுபிடித்துள்ளது. சூரிய ஒளியையோ அல்லது செயற்கை ஒளி யையோ பயன்படுத்தி வினைத்திறன் மிக்க வகையில் நீரின் தொற்றை நீக்க முடியு மென இந்த ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இம்முறையிலே, ஒளி மூலம் தொழிற்படும் நிலைக்கு மாற்றப்பட்ட ஊக்கியானது, இருண்ட சூழலிலும் கூட நீரைத் தொற்று நீக்கப்பயன்படுகிறது.

நைதரசனானது டைட்டேனியம் ஒட்சைட்டுடன் மாசுபடுத்தப்பட்டது அம்மேற்பரப்பில், பலேடியம் நனோ துணிக்கைகளின் துணையுடன் தொடர்ந்து 24 மணிநேரங்களுக்கு சக்தியில் எந்தவித மாற்றமுமின்றி நீரைத்தொற்று நீக்க முடியும். பல ஆண்டுகளுக்கு முன்னரே உயர் செறிவடைய புற ஊதா ஒளிமூலம் நீரிலுள்ள பக்டீரியாக்களை கொல்லும் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. தற்போது ஆய்வாளர்கள் இந்தத் தொழில்நுட்பத்தின் வினைத்திறனை அதிகரிப்பதில் முனைந்து வருகின்றனர். புற ஊதா ஒளியினால் தொழிற்படச் செய்யப்படும், ஒளி ஊக்கி இரசாயனச் சேர்வைகளை உருவாக்கி, அவற்றின் மூலம் நீரை மாசுபடுத்தும் நண்ணுயிர்களைக் காபனீரொட்சைட்டாகவும் நீராகவும் பிரிகையடையச் செய்வதே இந்த ஆய்வின் நோக்கமாகும்.

தற்போது புற ஊதா ஒளியைத் தவிர்த்தது கட்புல ஒளியைப்பயன்படுத்தியே ஒளி ஊக்கியயைத் தொழிற்படச் செய்யும் முறைமை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

400 nm இலிருந்து 550 nm வரையான அலை நீள எல்லைக்குள் உள்ள கட்புல நிறமாலையே இந்தப் புதிய ஆய்வின் அடிப்படையாகும். நைதரசனுடன் மாசுபடுத்தப்பட்ட பொதுப் பதார்த்தமொன்று கட்புல ஒளியை உறிஞ்சச் செய்யப்பட்டது. நைதரசனுடன் மாசுபடுத்தப்பட்ட இந்த டைட்டேனியம் ஒட்சைட் பதார்த்தத்தின் வினைத்திறனை அதிகரிக்கும் பொருட்டே பலேடியம் நனோ துனிக்கைகள் அம்மேற்பரப்பில் சேர்க்கப்பட்டன.

பாரம்பரிய ஒளி ஊக்கிப்பதார்த்தங்களிலிரு ந்து புதியதோர் முறைக்கு மாறுவது கூட நல்லதோர் எதிர்காலத்தைச் சுட்டுவதாகவே தெரிகிறது. சூரிய நிறமாலையானது 5 சதவீதமளவு புற ஊதாப் பகுதியையும் 46 சதவீதமளவு கட்புலப்பகுதியையும் உடையது. ஆகையால் சூரிய சக்தியைப் பயன்படுத்தி மேலும் வினைத்திறன் மிக்க முறையாக இந்த முறை மாற்றப் படலாம். மனிதக்கழிவுகள் கலக்கும் நீரில் செறிவாகக் காணப்படுவது ஈகோலி எனப்படும் பக்ரீரியா ஆகும்.

ஈகோலி செறிவு மிக அதிகமாகவுள்ள நீரை இந்தப் புதிய முறை மூலம் வெவ்வேறு நேரங்களுக்கு ஆய்வாளர்கள் பரிகரித்தனர். ஒரு மணித்தியாலத்தின் பின்னர் பக்டீரியாவின் செறிவை அளந்தபோது, அது 10 மில்லியன் கலங்கள்/லீற்றர் இலிருந்து 1 கலம்/10,000 லீற்றர் எனும் அளவுக்கு குறைந்து காணப்பட்டது.

No comments:

Post a Comment