Wednesday, February 17, 2010

பனிப்பாறைகள் உருகுவது தொடர்ந்தால் வற்றாத ஜPவநதிகளும் உலகிலிருந்து மறைந்து போகும்







பூமி தோன்றிய வரலாற்றினடிப்படையில், ஆய்வாளர்கள் பல்வேறு காலகட்டங்களை வகுத்துள்ளனர். அத்தகையதொரு காலகட்டமே பனியுகமெனக் குநிக்கப்படுகிறது.

அக்காலகட்டத்தில் பூமிப்பந்தின் பெரும்பகுதி பனிக்கட்டி ஆறுகள், பனிப்பாறைகள் மற்றும் பனிப்போர்வைகளால் மூடப்பட்டிருந்தது. பூமியின் சராசரி வெப்பநிலையானது பல நூற்றாண்டுகளாகவும் தசாப்தங்களாகவும் சீராக மாறிவந்தது.

பூமியின் வருடாந்த சராசரி வெப்பநிலை தாழ்வாகக் காணப்படும் சில காலப்பகுதிகளில், பனிப்படலங்கள் உருவாவதற்கும், அவை பூமியின் பெரும்பகுதியை மூடுவதற்கும் வழிவகுக்கப்படும்.

கடந்த 2.5 மில்லியன் வருடங்கள், ஏறத்தாழ 20க்கும் மேற்பட்ட பனியுங்கள் நிகழ்ந்திருக்கலாமென ஆய்வாளர்கள் குநிப்பிடுகின்றனர்.

அதற்கு பூமியின் வருடாந்த சராசரி வெப்பநிலையானது சில காலங்களில் மிகவும் அதிகமாகவும், சில காலங்களில் மிகவும் தாழ்வாகவும் காணப்பட்டிருந்தமையே காரணம் எனலாம்.

இத்தகைய நிகழ்வுகள் கடந்தகாலங்களி ல் ஏறத்தாழ 20க்கும் மேற்பட்ட தடவைகள் நிகழ்ந்தி ருக்கலாமென ஊகிக்க முடியும்.

இறுதியாக நிகழ்நத பனியுகமானது இற்றைக்கு ஏறத்தாழ 50,000 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்ததாகவும், பின்னர் இற்றைக்கு 18,000 வருடங்களுக்கு முன் பூமியின் வெப்பநிலை உயர்வதற்கு ஆரம்பித்ததாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

பனிமலைகள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் ஆய்வுகளே பனியுகங்கள் தொடர்பான முடிவுகளுக்கு வித்திட்டன. மூலமாகிய பனிமலையிலிருந்து பனிக் கட்டியாறுகள் உருவாகிக் கீழ் நோக்கி அடிவாரத்துக்கு வரும்போது மலைப் பகுதிகளிலும் மலையடிவாரங்களின் பாறைப் பகுதிகளிலும் தனித்துவமான கோலங்களைச் செதுக்கி விடுகின்றன. இத்தகைய சுவடுகளின் அடிப்படையிலேயே பனியுகங்கள் தொடர்பான கணிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டன.

இவ்வாறு நிகழ்ந்த பனியுகங்கள், பூமியின் காலநிலையிலும், அயனமண்டல உயிரினங்கனின் தோற்றத்திலும் பெரும்பங்கு வகித்தன. பனியுகம் நிகழும் காலகட்டத்தில், அயன மண்டலமானது உலர்ந்து காணப்படும் அதேவேளை, குனிர்மையான தன்மையுடையதாகவும் காணப்படும்.

இதனால் சில அயனமண்டல மழைக்காடுகள் உலர் வலயக் காடுகளாகவோ அல்லது சவன்னாக்காடுகளாகவோ மாற்றப்படும். அதே சமயம் சில அயனமண்டலக் காடுகள் இந்நிலைமையிலிருந்து தப்பித்து விலங்குகளுக்கும் தாவரங்களுக்கும் புகலிடமாக அமையும்.

இடைப்பனியுகக் காலப்பகுதிகளில் அயனமண்டலம் ஈரப்பற்றுள்ள நிலைமையை அடைகையில், அக்காடுகள் விரிவாக்கப்படுவதுடன், புகலிடம் பெற்ற தாவர மற்றும் விலங்குகளின் குடித்தொகை அதிகரிக்கப்படும்.

இன்று காணப்படும் அயனமண்டலக் காடுகள் அதிகளவிலான மழைவீழ்ச்சியைப் பெறுவதற்கும், எண்ணிக்கையில் அதிகளவான இனங்கனின் வாழிடமாகக் காணப்படுவதற்கும் இந்நிகழ்வே காரணமாகிறது. இத்தகைய காடுகளை ஆபிரிக்கா மற்றும் தென்னமெரிக்காவில் காணலாம்.

பூமியின் மேற்பரப்பிலே, ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்குப் பொருட்கள் இடம்பெயர்ந்தமையும் பனியுகம் நிகழ்ந்தமைக்கான சான்றாகக் கருதப்படுகிறது.

இவ்வாறு பனியுகங்கள் உருவாவதற்கு வானியல் ரீதியான மற்றும் புவியியல் [தியான காரணங்கள் குநிப்பிடப்படுகின்றன. சூரியப் பொட்டுக்களின் தோற்றமானது பனியுகம் உருவானதற்குரிய வானியல் ரீதியான காரணமாகக் கருதப்படுகிறது.

சூரியப் பொட்டுக்கள் எனப்படுபவை எதிர்பாராதளவிலான சூரியசக்தி வெளிவிடப்படும் சந்தர்ப்பங்கனில் ஏற்படும் வெளித்தள்ளுகைகளாகக் கருதப்படுகின்றன. வருடாந்தம் நிகழும் சூரியப் பொட்டுக்களின் எண்ணிக்கையானது 11 வருடங்களுக்கொரு முறை சீரான கோலமொன்றில் மாற்றமடைவதாகக் குநிப்பிடப்படுகிறது.


இந்த சூரியப் பொட்டுக்கள் புவிமேற்பரப்பில் பனிப்புலங்களின் அதிகரிப்புக்கும் குறைவுக்கும் காரணமாகின்றனவென விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அதேசமயம், சூரியனைச் சுற்றி வரும் பூமியின் சுற்றுப் பாதையின் கேத்திரகணிதவியலில் ஏற்படும் மாற்றங்களும் பனியுகங்கள் உருவாகக் காரணமாகலாமென விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

புவி மேற்பரப்பில் நிகழும் மாற்றங்களும் பனியுகங்கள் உருவாகக் காரணமாகின்றன. எரிமலைகள் வெடிப்பதானது பூமியின் வெப்பநிலையில் வேறுபாடுகளைத் தோற்றுவிக்கும். அதேசமயம், எரிமலைகள் வெடிப்பதால் உருவாகும் தூசு துணிக்கைகனின் படலம் சூரியக்கதிர்களைத் தனது மேற்பரப்பில் தெநிப்படையச் செய்வதால், அவை புவி மேற்பரப்பை வந்தடைவதால் தவிர்க்கப்படுகின்றது.

எரிகற்கள் புவி மேற்பரப்பில் ஏற்படுத்தும் விளைவும் புவியின் வெப்பநிலையில் மாற்றத்தை ஏற்படுத்துமென நம்பப்படுகிறது.

கடந்த காலங்கனில் எரிகற்கள் புவிமேற்பரப்பில் மோதும் போதும் பாரியளவிலான தூசு துணிக்கைகள் வனிமண்டலத்தில் வெனிவிடப்படுகின்றன. இத்தகைய தூசு துணிக்கைகள் பூமியின் வருடாந்த சராசரி வெப்பநிலையைக் குறைப்பதில் பங்காற்றுகின்றன.

பூமியின் வருடாந்த சராசரி வெப்ப நிலையில் ஏற்படும் சிறி தளவிலான குறைவுகூட பனியுகமொன்றைத் தோற்றுவிக்குமென்பது வெளிப்படையான உண்மையாகும்.

தற்போது பெருமளவிலான பனிப்பாறைகளும் பனிக்கட்டி ஆறுகளும் பூமியின் முனைவுப் பகுதிகனிலேயே காணப்படுகின்றன. அவை இல்லாத கண்டமாக அவுஸ்திரேலியா மட்டுமே காணப்படுகிறது.

பனிப்பாறைகள் உருவாவதற்குப் பொருத்தமான நிபந்தனை காணப்படும் சில மத்திய கோட்டுப் பிரதேசங்கனிலும் இத்தகைய பனிப்பாறைகள் காணப்படுகின்றன. பனிக்கட்டி ஆறுகளுடன் சேர்த்து பாறைகள், மண், மரங்கள் மற்றும் ஏனைய சிதைவுகளும் அடித்துச் செல்லப்படுகின்றன.

கோடைக்காலத்திலேற்படும் குளிர்ந்த காலநிலையாலும் குளிர்காலங்களில் ஏற்படும் பனிப்பொழிவுகளாலும் பனிப்பாறைகள் தோற்றுவிக்கப் படுகின்றன. அந்தாட்டிக்கா பகுதிகளில் பனி வீழ்படிவு குறைவாகக் காணப்படுவதால் பனிப்பாறைகள் மிகவும் மெதுவாகவே பெருகுகின்றன.

பனிப்பொழிவு நிகழ நிகழ ஒரு படையின் மேல் அடுத்த படையாகப் பனி பெருகும். காலப்போக்கில் இப்படைகள் இணையத் தொடங்கும். அவ்வாறு இணைகையில் மேலுள்ள படைகளில் உருவாகும் அமுக்கம், கீழுள்ள படைகனிலுள்ள பனியைப் பனிக்கட்டிகளாக மாற்றும்.

இவ்வாறு பனிக்கட்டிகள் பெருகும் போது படைகளுக்கிடையிலான வளி இடைவெளியையும் சேர்த்து பனிப்பாறை உறுதிமிக்கதாக மாறும். இப்பனிப்பாறைகள் ஒளி நிறமாலையிலுள்ள நீலம் தவிர்ந்த ஏனைய நிறங்களை உறிஞ்சுவதால் அவை நீல நிறமாகக் காட்சி தருகின்றன.

இப்பனிப்பாறைகள் தமக்குத் தேவையான நிறை, புவியீ ர்ப்பு மற்றும் அமுக்கத்தைப் பெற்றவுடன், தமது சொந்தத் திணிவினால் ஏற்படுத்தப்படும் விசை காரணமாகக் கீழ் நோக்கிப் பனிக்கட்டியாறாகப் பாயும். இவ்வாறு உருவாகும் பனிக்கட்டியாறுகனிலும் பனிப்பாறைகளிலும் வருடம் முழுவதும் பனி காணப்படும். இவை பொதுவாக மலை உச்சிகள், பள்ளத்தாக்குகள் ஆகிய பகுதிகளில் காணப்படும்.

ஆனால் பனிப்பாறைகளுடன் ஒப்பிடுகையில் பனிப்போர்வைகள் வித்தியாசமானவை. இவை நிலமேற்பரப்பில் காணப்படும். இவற்நின் தடிப்பானது 4km வரை செல்லக்கூடியது. அந்தாட்டிக்கா பகுதியில் காணப்படும் பனியை பனிப்போர்வையாகவே கருதுகின்றனர்.

பனிப்பாறைகளின் ஆழத்துடன் அவற்றி ன் வெப்பநிலை மாற்றமடையும். ஆழம் அதிகரிக்க, புவி வெப்ப சக்தி காரணமாக, அவற்றி ன் வெப்பநிலை மேற்பரப்பைவிட அதிகமாகவிருக்கும்.

இயற்கையின் அருங்கொடையாகக் கருதப்படும் இந்தப்பனி, பூமியின் வெப்பநிலையை அதிகரிக்கவிடாமல் சீராகப் பேணுவதற்கும் உயிரினங்களுக்கிடையிலான சமநிலையைப் பேணுவதற்கும் பெருமளவில் பங்காற்றுகின்றது.

இன்று எங்கும் பேசப்பட்டு வரும் விடயமான காலநிலை மாற்றத்தின் விளைவுகளை ஒவ்வொருவரும் ஒவ்வொருமாதிரி விளங்கிக்கொள்வர்.

வறட்சியுடன் போராடும் விவசாயிக்குப் பட்டினியாகவும், மாலைதீவுகள் போன்ற சிறிய தீவுகளி ல் வசிக்கும் மக்களுக்கு வேறுநாடுகள் நோக்கிய இடம்பெயர்வாகவும், நகரமயப்படுத்தப் பட்ட பகுதிகனில் வாழ்வோருக்கு நீர்ப்பற்றாக்குறையாகவும் சுகாதாரப் பிரச்சினையாகவும் தென்படும்.



இவ்வாறு ஒவ்வொருவரும் தத்தமது நிலைகளுக்கேற்ப புதிய புதிய பிரச்சினைகளை எதிர்கொள்கின்ற போதிலும், காலநிலை மாற்றமென்பது உலகளாவிய ரீதியில், சகல ஜீவராசிகளும் எதிர்நோக்கிவரும் முக்கிய பிரச்சினையாகும்.

இந்தக்காலநிலை மாற்றத்தை உருவாக்கும் மிக முக்கிய காரணியாக பூமியின் வருடாந்த சராசரி வெப்பநிலையுயர்வு கருதப்படுகிறது.

இவ்வாறு வெப்பநிலை உயர்வடைவதால் பனிப்பாறைகள் உருகும். பனிப்பாறைகள் உருக, புவியின் வெப்பநிலை மேலும் உயரும். இப்படியே இவை மீளும் தாக்கங்களாகத் தொடருமென எதிர்பார்க்கப்படுகிறது.

பனிப்பகுதிகளாகக் கருதப்படும் ஆர்டிக், அந்தாட்டிக்கா பகுதிகளே காலநிலை மாற்றத்துக்கான முன்னெச்சரிக்கையை விடுக்கும் தொகுதிகளாகக் கருதப்படுகின்றன. இந்த முனைவுப் பகுதிகள், வெப்பக்கதிர்களை புவி மேற்பரப்பால் உநிஞ்சப்படவிடாமல் மீண்டும் தெறி ப்படைய வைப்பதிலும் பங்களிக்கின்றன.

கைத்தொழில் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக வளிமண்டலத்தில் வெனிவிடப்படும் கழிவுகள் புவி வெப்பநிலையை அதிகரிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

உலகளாவியரீதியில் வருடாந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியை ஒவ்வொரு நாடும் 5 சதவீதத்தால் குறைத்தால் புவியின் வருடாந்த சராசரி வெப்பநிலை 5 பாகை செல்சியசைவிட அதிகமான அளவினால் குறையுமென ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு சூழற் பிரச்சினையாக மட்டுமே காணப்பட்ட காலநிலை மாற்றம் இன்று பொருளாதாரப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதனால் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கு மிடையிலான இடைவெனி மேலும் அதிகமாக்கப்படுவதோடு, சூழல் அகதிகள் என்ற புதிய தரப்பினர் உருவாகும் காலமும் வெகு தொலைவில் இல்லையெனலாம்.

இக்காலநிலை மாற்றத்தை உருவாக்கும் பனிப்பாறைகள் உருகுதலானது அதிகளவில் மனித செயற்பாடுகனினாலேயே ஏற்படுகின்றது. ஆங்கிலேயப் பெளதிகவியலாளரான ஜோன் டின்டேல் என்பவர், புவியின் காலநிலையை மாற்றுவதில் காபனீரொட்சைட் மற்றும் நீராவியின் சக்தி ஆகியன பெரும் பங்கை வகிக்குமென 1863 ஆம் ஆண்டு தனது ஆய்வறிக்கையில் குநிப்பிட்டிருந்தார்.

அவர் குறிப்பிட்டதை உணர்வதற்கு எமக்கு ஏறத்தாழ ஒரு நூற்றாண்டிலும் அதிக காலம் எடுத்தது. இவ்வாறு நாம் உணர்ந்த விடயத்தைப் பரிகரிக்க, இன்னொரு நூற்றாண்டு காத்திருக்க முடியாது.

புவி வெப்பமடைவதால் பனிப்போர்வைகளும் பனிப்¡றைகளும் உருக ஆரம்பித்துள்ளன. 1990 கனின் பின்னர் அவை உருகும் வீதம் சடுதியான அதிகரிப்பைக் காட்டு கின்றது. 20 ஆம் நூற்றாண்டின் கடைசித் தசாப்தம் அந்த நூற்றாண்டி லேயே வெம்மை அதிகமாகவிருந்த தசாப்தமாகப் பதியப்பட்டது.

இந்நிகழ்வு துருவப்பகுதிகளுக்கு மட்டுமே வரையறுக்கப்படாமல் பனிப்படிவுகள் காணப்படும் சகல பிரதேசங்கனிலும் நடைபெறுகிறது.

இவ்வாறு பனியுருகுவதில் செல்வாக்குச் செலுத்தும் பிரதான காரணியாக, கரிய காபனின் படிவு கருதப்படுகிறது. உலகின் மூன்றாவது துருவமென அழைக்கப்படும் திபெத்திய மேட்டு நிலத்தில் காணப்படும் பனிப்போர்வைகளினதும், பாறைகளினதும் சராசரி வெப்பநிலை ஒவ்வொரு தசாப்தமும் 0.3 பாகை செல்சியசால் அதிகரித்து வருவதாகக் கணிப்பிடப்படுகிறது.

சுவட்டு எரிபொருட்கனின் பாவனையாலும், முக்கியமாக அவற்நின் குறைதகனத்தாலும் ஏனைய மனித செயற்பாடுகளாலும் வனிமண்டலத்தில் காபdரொட்சைட்டும் சேதனக்காபனும் கரிய காபனும் வெனிவிடப்படுகின்றன. கரிய காபன், தனது கருமைத்தன்மையால் அதிகளவிலான வெப்பக்கதிர்ப்பை உநிஞ்சுகிறது.

ஆகையால் சேதனக்காபனுடன் ஒப்பிடுகையில் வனிமண்டலத்தை அதிகளவில் வெப்பமாக்கும். வளிமண்டத்தில் வெளிவிடப்படும் காபனீரொட்சைட்டானது வனிமண்டலத்திலே ஏறத்தாழ 100 வருடங்களுக்கு நிலைத்து நிற்கும். ஆனால் இந்தக்கரிய காபனோ, ஒரு சில வாரங்களுக்கு மேல் நிலைத்து நிற்காது. எனவே காபனீரொட் சைட்டைக் கட்டுப்படுத்துவதைவிட கரிய காபனைக் கட்டுப்படுத்துவது வினைத்திறன் மிக்கதாக இருக்குமென நம்பப்படுகிறது.

இவ்வாறு கட்டுப்படுத்துவதன் பலனை உடனடியாக அறியக்கூடியதாக இருக்கும்.

வளிமண்டலத்தில் காணப்படும் இக்கரிய காபன் துணிக்கைகள் பச்சை இல்ல வாயுக்களைப் போல புவி மேற்பரப்பைச் சூடாக்குவதில்லை. இவை வளிமண்டலத்தின் வெப்பநிலையை அதிகரிப்பதால் பனிப்பாறைகள் உருகத் தொடங்கும். அதேசமயம் இந்தக் காபன் துணிக்கைகள் பனிப்போர்வைகள் மீதும் பனிப்பாறைகள் மீதும் படிவதால் அவற்றின் தூய வெண்மை நிறம் மங்கி அவை அழுக்கடைய ஆரம்பிக்கும்.

இவ்வாறு அழுக்கடைந்த பனி, சூரிய வெப்பத்தை அதிகளவில் உறிஞ்சுவதால் பனி மேலும் உருகத் தொடங்கும். கரிய காபனானது கப்பல்கள், வாகனங்கள், நிலக்கரி மின்னுற்பத்தி நிலையங்கள் வெளிவிடும் புகைகளில் அதிகளவில் காணப்படுகிறது.

ஆசியாவிலே, கரிய காபனை அதிகளவில் வெளிவிடும் நாடாக சீனா கருதப்படுகிறது. இது தவிர அதிகரிக்கும் பச்சை இல்ல வாயுக்களுடன் ஒசோன் படை அரிப்படைதலும் புவியின் வெப்பநிலையை அதிகரிப்ப தில் பங்களிக்கின்றன. இவை காரணமாகப் பனி பெருமளவில் உருக ஆரம்பித்துள்ளது.

இவ்வாறு பனி உருகிவருவதை அவதானிக்க செய்மதித் தொழில்நுட்பம் உதவுகிறது. செய்மதிப் படங்கள் மூலம் பனிப்பாறைகனில் ஏற்படும் மாற்றத்தைத் தெளிவாக அவதானிக்கலாம். அத்துடன் பனிப்பாறைகனின் பெளதிக இயல்புகளையும் துல்லியமாக அவதானிக்க முடியும்.

உருகும் பனியால் கடல்மட்டம் பாரியளவில் உயருமென எதிர்பார்க்கப் படுகிறது. கிறி ன்லாந்தில் உள்ள பனி முழுவதுமாக உருகினால், சமுத்திரங்க ளின் நீர்மட்டம் 7 பாகை செல்சியசால் உயருமென எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் எஸ்கிமோவர் போன்ற பழங்குடியினர் வாழ்விடமற்று அழிந்து போவரென எதிர்வு கூறப்படுகிறது.

வளிமண்டலத்தால் காவிச் செல்லப்படும் வெப்பம் காரணமாக உருகும் துருவப் பகுதிப் பனிப் பாறைகளால் சமுத்திர நீரோட்டங்க ளின் தன்மை மாற ஆரம்பிக்கும். சமுத்திர நீ ரோட்டங்களும் வானிலையில் செல்வாக்குச் செலுத்துவதால் வானிலையில் எதிர்பாராத மாற்றம் ஏற்படும்.

கடல் `ர்மட்டம் உயர்வடையும் அதேநேரம், கடல் `ரின் உவர்த்தன்மை குறைவடையலாமென எதிர்பார்க்கப்படுகிறது. பனி உருகத்தொடங்க, வனிமண்டலத்தில் வெனிவிடப்படும் மெதேன் வாயுவின் அளவும் அதிகரிக்கும். இந்நிகழ்வுகள் மீளும் தாக்கமாக நடைபெறுவதால் உலகளாவிய [தியில் வானிலை மற்றும் காலநிலை மாற்றங்கள் பாரியளவில் ஏற்படும்.

உருகும் பனிமலைகள் காரணமாக அவற்நிலிருந்து உருவாகும் ஆறுகள் ஊற்றெடுப்பது தடைப்படுமெனக் குநிப்பிடப்படுகிறது. திபெத்திலுள்ள மலைத் தொடர்கனில் காணப்படும் பனிச்சிகரங்கள் மிகவும் வேகமாக உருகிவருவதால் ஏரிகனின் பரப்பளவு அதிகரிப்பதுடன், புதிய பல ஏரிகள் உருவாகின்றனவென ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதன் காரணமாக நதிகளில் வெள்ளம் ஏற்படுவதுடன், வற்றாத ஜீவ நதிகள் கூட ஒரு சில பருவங்களில் மட்டுமே நீரையுடைய நதிகளாக மாற்றம் பெறும் சாத்தியக் கூறுகளும் காணப்படுகின்றன.

இன்று காணப்படும் நிலை எதிர்காலத்திலும் தொடர்ந்தால் இன்னும் 30 வருடங்களில் இமாலயப் பனிச்சிகரங்களையும் கங்கை போன்ற ஜீவநதிகளையும் கூடக் காணமுடியாமல் போகுமென ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

உயரும் கடல் மட்டத்தால் சிறிய தீவுகள் பல, கடலினுள் மூழ்கும். நன்னீர் வளம் பாதிக்கப்படும். பென்குயின், கடற்சிங்கம் போன்ற பல உயிரினங்கள் அழிவடைந்து போகும். புவி மற்றும் சமுத்திரத் தொகுதியின் சமநிலை பாதிக்கப்படுவதால் பல இயற்கை அனர்த்தங்கள் தவிர்க்க முடியாதனவாகும். அத்துடன் மறைமுகமான விளைவுகளாகக் காணப்படும் சமூக பொருளாதார நெருக்கடிகள் அதிகரிக்கும்.

மொத்தத்தில் மனிதனுட்பட சகல ஜீவராசிகனின் வாழ்வியலும் கேள்விக்குறியாகும். இந்நிலை இப்படியே தொடர்ந்தால் மனிதன் தனது வாழ்வியலை வளமாகப்பேண உருவாக்கிய முறைமைகள் அவனையே அழித்துவிடும் காலம் நெருங்குகிறதோ என்றும் எண்ணத்தோன்றுகிறது.

இனியும் காலம் தாழ்த்தாமல் நாமொவ்வொருவரும் மேற்கொள்ளும் முயற்சிகளால் புவி வெப்பமடைதலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதன் மூலம் பனிப்பாறைகள் மேலும் உருகுவதைத் தவிர்க்கலாம்.

சேதன மற்றும் கரிய காபன் வெனிவிடப்படுவதைத் தவிர்க்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவதே பனி உருகுதலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்போதுமானது. மீள உருவாக்கப்படக்கூடிய சக்தி வளங்களின் பாவனையை அதிகரிக்க வேண்டும்.

நாம் விழிப்படைவதோடு மட்டமல்லாமல் எம்மைச் சார்ந் தோருக்கும் இத்தகைய விடயங்கள் தொடர்பான விழிப்புணர்வையூட்ட வேண்டும். பூமித்தாயின் பிள்ளைகளான நாமொவ்வொருவரும் உணர்ந்து, ஒன்றிணைந்து செயற்பட்டாலன்றி வேறெந்தவகையி லும் பனிக்கட்டிகள் உருகுவதைக் கட்டுப்படுத்த முடியாதென்பதே வெளிப்படையான உண்மையாகும்.

2 comments:

tamilsiththan said...

//மனிதன் இயற்கையின் ஓர் அங்கமே. இயற்கையுடன் இணைந்த வாழ்வே மானிட குலத்தை உய்வித்துக் காக்கும் எனவே சூழலைக் காத்துச் சுகமாய் வாழ நாம்
திடசங்கற்பம் பூணுதல் வேண்டும்// என்கின்ற தொனிப்பில் இச்சமூகத்தை நோக்கி நீங்கள் எழுப்புக்கிற மகத்தான அக்கறையை பலரும் சட்டை செய்யாதிருக்கிறார்கள் என்பது வேத்னை தருகின்றது.தங்களின் கட்டுரைகளும் ஆய்வும் மனிதகுலத்திற்கு இன்று அவசியம். தொடருங்கள்.
தமிழ்சித்தன்
akathiyin.blogspot.com

என்றும் அன்புடன், சாரதாஞ்சலி-ம said...

தங்கள் ஊக்கத்துக்கு மிக்க நன்றி சகோதரரே..!!!

Post a Comment