Friday, December 18, 2009

வேற்றுக்கிரகவாசிகள் பு+மியை உளவு பார்க்கின்றனரா?




வேகமாக வளர்ச்சி கண்டுவரும் நவீன விஞ் ஞான உலகையே வியப்புக்குள் ளாக்கித் தம்பக்கம் திரும்ப வைக் கும் பல நிகழ்வுகள் அன்றாடம் நடந்தபடிதான் இருக்கின்றன.
2002 ஆம் ஆண்டளவில் இலங் கையின் புராதன பிரதேசமான திம்புலாகலைக்குன்றின் உச்சியில் பிரதேசவாசிகள் விசித்திரமான நீலநிற ஒளியை அவதானித்தனர்.
அதே காலத்தில் பொலன்ன றுவை, அனுராதபுரம் வாசிகளும் அத்தகைய புதுமையான ஒளியை அவதானித்தனர். அவ்வொளி, பறக்கும் தட்டினுடையதாகவோ அல்லது வேற்றுக்கிரகவாசிகளு டன் தொடர்புடைடையதாகவோ இருக்கலாமெனப் பல ஊகங்கள் வெளியிடப்பட்டன.
உலகளாவிய ரீதியில் இத்தகைய பல நிகழ்வுகள் அவதானிக்கப் பட்டு வந்துள்ளன. ஆனால் இன் றுவரை இவை இத்தகையனதா னென விஞ்ஞானத்தால் வரைய றுத்துக்கூற முடியவில்லை. எனி னும் அது பல ஊகங்களை வெளியிட்டுள்ளது.
அண்டவெளியெனப்படுவது இன்றும் கூடப் பல ஊகங்களும் பிரமிப்புக்களும் நிறைந்ததாகவே காணப்படுகிறது. அண்டவெளி யானது பல்வேறு விதமான கோள்கள், நட்சத்திரங்கள், எரிகற்கள், வேறு பொருட்களுட்ப டப் பல்லாயிரம் பில்லியன் பொரு ட்களைத் தன்னகத்தே கொண்டுள் ளது.
நாங்கள் காணும் சூரியனும் ஒரு நட்சத்திரமே. அதைப் போன்று ஏறத்தாழ 500 பில்லியன் சூரியன்கள் அண்டவெளியில் காண ப்படுகின்றன. அண்டவெளியிலு ள்ள நட்சத்திரங்களை ஒரு நொடி இடைவேளை கூட விடாமல் எண்ணுவோமானால் எண்ணி முடிக்க ஆகக் குறைந்தது 60,000 வருடங்களாவது ஆகுமெனக் கணக்கிடப்பட்டுள்ளது.
புவியானது சூரியக்கிரகக் குடும் பத்திலுள்ள ஒன்பது கோள்களி லொன்றாகும். சூரியனையும் அதனைச் சுற்றிவரும் கோள்களை யுமே சூரியக்குடும்பம் அல்லது சூரியத்தொகுதியென்றழைப்பர். இச் சூரியத்தொகுதி போன்ற 240 சூரியத் தொகுதிகள் இனங்காணப்பட்டுள்ளன.
நம்பமுடியாதளவு பெரிய அண்ட வெளியினளவானது வேறு உயிரினங் களையுடைய கோள்கள் பற்றிய எண் ணக்கருவுக்கு வித்திடுகின்றதென்பதில் எதுவித ஐயமுமில்லை. விபரிக்க முடியாத பல வானியல் அவதான ங்கள் பண்டைக்காலம் தொட்டு வரலாற்றில் பதியப்பட்டுள்ளன.
அவற்றில் சில முற்றிலும் வானியல் தொடர்பானவை. சில, வானியல் கொள்கைகளுக்கப்பாற்பட்டவை. பறக்கும் தட்டு போன்ற அத்தகைய அவதானங்களை ‘அடையாளம் காணப்படாத பறக்கும் பொருட் கள்’ என நவீன விஞ்ஞானம் குறிப்பிடுகிறது.
கி. மு. 384 இல் கிரேக்க தத்துவஞானி அரிஸ்டோட்டில், விண்ணில் தான் கண்ட விசித்தி ரப் பொருட்களைச் ‘சொர்க்கத்தின் தட்டுக்கள்’ என விபரித்திருந்தார். கி. மு. 329 இல் மாவீரன் அலெக்சாண்டருடனான கிரேக்க இராணுவத்தின் இந்தியா நோக்கிய படை நகர்வை, வெள்ளிக்கேடயங்களையொத்த விசித்திரமான பறக்கக்கூடிய பொருட்கள் இடைமறித்தனவென வும் கூறப்படுகின்றது.
கி.பி. பதினோராம் நூற்றாண் டில் வாழ்ந்த சீனக் கல்வியாள ரான ஷென்குவே என்பவர், தான் எழுதிய கட்டுரையில், தன்னால் அவதானிக்கப்பட்ட இத்தகைய பறக்கும் பொருட்களைப் பற்றியு மெழுதியிருந்தார். அத்துடன் அப்பறக்கும் பொருளின் கதவுகள் திறக்கப்படக் கூடியதாகவும் அது ஒளி வீசக் கூடியதாகவும் அதிவே கமாகச் செல்லக்கூடியதாகவுமிருந் ததாகக் குறிப்பிட்டிருந்தார்.
மறு மலர்ச்சிக்கால ஓவியங்க ளில் இத்தகைய பொருட்களைக் காணக்கூடியதாகவிருந்த போதி லும் அன்றைய காலங்களில் அவற்றிற்குச் சமய ரீதியிலான விளக்கமேயளிக்கப்பட்டது.
1878இல் ஜோண்மார்டின் என்ற சாதாரண விவசாயி மிகப் பெரிய கருமையான வட்டவடிவப் பறக் கும் பொருளொன்றை அவதானி த்தார். அப்பொருள் தட்டுப்போ ன்று காணப்பட்டதால் ‘பறக்கும் தட்டு’ எனப் பெயரிடப்பட்டது.
1950’ களின் ஆரம்பம் வரை இத்தகைய அவதானங்களைப் பறக்கும் தட்டுக்களென்றே அழைத்து வந்தனர். 1952 இல் ஏற்கனவே பெறப்பட்ட பலவகை ப்பட்ட அவதானங்களினடிப்படை யில் இத்தகைய பொருட்கள் ‘அடையாளம் காணப்படாத பொருட்கள்’ எனப் பெயரிடப்பட்டன.
விமானங்களைப் போலவோ அல்லது ஏவுகணைகளைப் போலவோ அல்லாமல் முற்றி லும் வேறுபட்ட வகையில் செய ற்படக் கூடிய, வானில் பறக்கி ன்ற, விமானங்களல்லாத சகல பொருட்களும் இவ்வகைக்குள் அடங்குகின்றன. இதற்குப் பின்னரான காலப் பகுதிகளில் இத்தகைய பொருட்கள் பல நாடுகளில் அவதானிக்கப்பட்டன. இப்பொருட்கள் தொடர்பான ஆய்வுகளைப் பல நாடுகள் மேற்கொள்ள ஆரம்பித்தன.


1980களில் இப்பொருட்கள் தொடர்பாகப் புதிய திருப்புமு னையொன்று ஏற்பட்டது. விஞ் ஞானப்புனைகதை எழுத்தாளர்க ளும், திரைப்பட மற்றும் நாடக இயக்குநர்களும் வேற்றுக்கிரக மனிதர்கள், பறக்கும் தட்டுக்கள் தொடர்பான பலவித கருப்பொரு ட்களையுடைய ஆக்கங்களையுரு வாக்கிப் பல்வேறுபட்ட ஊகங்க ளுக்கு வழிவகுத்தனர்.
இவ்வேற் றுக் கிரகங்களைச் சேர்ந்த மனித ர்கள் இயற்கையை மீறிய சக்தி யையும் தோற்றத்தையுமுடையவர் களாகச் சித்தரிக்கப்பட்டனர். இது கற்பனையாகவிருந்தாலும் விடை காணமுடியாத பல வினாக்களு க்கு ஊகங்கள் மூலம் விடையளி த்தது. மிகவும் பிரபல்யமான ‘எக்ஸ் பைல்ஸ்’ (X- Files) போன்ற தொலைக்காட்சித் தொடர்களும் ‘கடவுளின் ரதங்கள்’(Chariots of god) போன்ற புத்தகங்களும் மிகச்சிறந்த உதாரணங்களாகும்.
ராடர்களில் கூடச் சில புதிய பொருட்கள் பதியப்பட்ட ஆதார ங்களுள்ளனவென்பது மறுக்க முடியாத உண்மையாகும். இவை தவிர இத்தகைய பொருட்கள் பூமியில் இறங்கியதால் நில மேற் பரப்பில் ஏற்பட்ட அடையாளங் கள், அவை இறங்குமிடங்களில் வசிக்கும் மக்களுக்கும் விலங்குக ளுக்கும் ஏற்பட்ட பாதிப்புக்கள் போன்ற பல ஆதாரங்களும் பல் வேறு ஊகங்களைத் தோற்றுவிக் கின்றன. அத்துடன் இப்பொருட் கள் ஒளியைவிட வேகமாகப் பயணிக்கக் கூடியவையென்ற ஊகங்களும் காணப்படுகின்றன.
அடையாளம் காணப்படாத பறக்கும் பொருட்கள் தட்டு வடிவம், நீள்வட்ட, செவ்வக, முக்கோண வடிவத்துடன் ஒரு சக்கரம் அல்லது இரண்டு சக்கரங் களையுடையனவாகவும் பல்வேறு பட்ட அளவுகளிலும் காணப்படுவ தாக விபரிக்கப்படுகின்றன. அவற் றில் சிலவுடன் ஏறத்தாழ 4 அடி அல்லது 2 அடி உயரமான வித்தி யாசமான தோற்றத்தையுடைய மனிதர்களும் காணப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
குறிப்பாக அமெரிக்கா போன்ற சில அரசாங்கங்கள் இத்தகைய அடையாளம் காணப்படாத பறக் கும் பொருட்கள் தொடர்பான ஆய்வுகளை மிகவும் இரகசியமாக மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் நெவடா பாலைவனத்தின் ஒரு பகுதியான ‘பிரதேசம் 51’ எனப் பெயரிட ப்பட்ட பிரதேசத்தினுள் இத்த கைய வேற்றுக்கிரகவாசிகள் உயி ருடனும் உயிரின்றியும் மறைக்கப் பட்டு வருவதாகச் செய்திகள் உலவியதுண்டு.
அமெரிக்க அரசு ‘பின்னோக்கிய பொறியியல்’ முறைமையின் துணையுடன் இத்தகைய அடையாளம் காண ப்படாத பறக்கும் பொருட்களின் தொழில் நுட்பத்தை ஆராய்ந்து வருவதாகவும், இத்தொழில் நுட்பத்தையடிப்படையாகக் கொண்டு பி- 2 வகையைச் சேர்ந்த மிக வேகமாகப் பயணிக்கக் கூடிய விமானப்படை விமானங்களை வடிவமைத்துள்ள தாகவும் ஆதாரமற்ற தகவல்கள் வெளியானமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பின் நிமித்தம், இத்த கைய பல ஆய்வுகளின் விபரங் கள் வெளியிடப்படவில்லை யென்பதும் பலரது ஊகம்.
நாம் வாழும் புவியிலுள்ள சூரியத் தொகுதி போல வேறுபல சூரியத் தொகுதிகளும் அண்ட வெளியில் காணப்படுகின்றன வென ஆதாரபூர்வமாக நிரபிக்கப் பட்டுள்ள நிலையில், புவியைப் போல உயிரினங்களின் தோற்றத் துக்கும் நிலைப்புக்கும் ஏதுவான சூழலையுடைய வேறு கோள்கள் அச்சூரியத் தொகுதிகளிலும் காண ப்படலாம் என்ற ஊகங்களை மறு க்க முடியாது.
இந்த ஊகங்கள் தான் தர்க்க ரீதியான ஆதாரங் களை முன் வைப்பதற்கு அடிப்ப டையாக அமைகின்றனவெனி னும், இப்பொருட்கள் தொடர்பான தர்க்க ரீதியான ஆதாரங்கள் எவையும் இதுவரை முன்வைக்கப்படவில்லை என்பதே வெளிப்படையான உண்மையாகும்.
மனிதனதும், ஏனைய உயிரினங்களினதும் உடலியல் கட்டமைப்புக்கும் வாழ்வின் நிலைப்புக்கும் அடிப்படையாக அமையும் காபன், ஐதரசன், ஒட்சிசன், நைதரசன் போன்ற முக்கியமான மூலகங்களைப் போல, அத்தகைய வேற்றுக்கிரக உயிரினங்களின் தோற்றத்துக்கும் நிலைப்புக்கும், மனிதனால் அறியப்படாத வேறு பல மூலகங்கள் கூடக் காரணமாக இருக்கலாம். அவ்வேற்றுக் கிரகவாசிகள் வித்தியாசமான உடலமைப்பையுடையவர்களாகவும் காணப்படலாம்.
விஞ்ஞானிகள் வானொலித் தொலைகாட்டிகளைப் பயன்படுத்தியும் ஏனைய நவீன தொலைகாட்டிகளைப் பயன்படுத்தியும் வேற்றுக்கிரக மனிதர்கள் தொடர்பான சமிக்ஞைகள் தென்படுகின்றனவாவென அறிவதில் ஆர்வம் காட்டுகின்றனர். வேற்றுக்கிரக மனிதர்களிடையே தொடர்பாடல் காணப்பட்டால் நவீன தொழில் நுட்பத்தால் அவற்றை மனிதர்களால் கேட்கக் கூடியதாகச் செய்ய முடியும்.
ஆனால் அவர்கள் புவியிலுள்ளோரைவிட, தொழில் நுட்ப ரீதியாகவும் அறிவு ரீதியாகவும் மிகவும் முன்னேற்றமடைந்தவர்களாகக் கருதப்படுவதால் தம்மைப்பற்றிய தகவல்களைப் பிறர் அறிய முடியாத வகையிலான தொழில் நுட்பங்களைப் பாவிப்பவர்களாகக் கூட இருக்கலாமெனவும் தெரிவிக்கப்படுகிறது.
விஞ்ஞானிகள் புவியிலிருந்து சமிக்ஞைகளை அனுப்பி ஏதாவது பதில் கிடைக்கிறதாவென எதிர்பார்த்தவண்ணம் உள்ளன. ஆனால் வேற்றகிரகவாசிகள் எமது சமிக்ஞைகளைத் தமது தொழில் நுட்பம் மூலம் தவிர்க்கவும் முயலலாமெனத் தெரிவிக்கப்படுகிறது.
சாதாரண மனிதரால் ஒளியின் வேகத்தில் பயணிக்க முடியாது. ஆனால் வேற்றுக்கிரக மனிதர்களால் அவ்வாறு பயணிக்க முடியுமெனவும், அந்நிலையில் ஒரு சூரியத் தொகுதியிலிருந்து இன்னொரு சூரியத் தொகுதிக்கு ஒருசில மணித்தியாலங்களுக்குள்ளேயே அவர்களால் பயணிக்க முடியுமெனவும் ஊகங்கள் தெரிவிக்கப்படுகின்றன.
ஆனால் அந்த வேகத்தில் பொருளொன்று பயணிக்குமாயின் வளியுடன் ஏற்படும் உராய்வு காரணமாக அப்பொருள் தீப்பற்றுமென விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இலங்கையைப் பொறுத்தவரையிலும் இத்தகைய அடையாளங் காணப்படாத பறக்கும் பொருட்கள் பல இடங்களில் அவதானிக்கப்பட்டுள்ளன. 2006 ஆம் ஆண்டு காலியில் இரண்டடி உயரமான விசித்திர மனிதர்கள் தென்பட்டனரெனவும், அவர்களை அணுக முற்பட்ட பொதுமக்கள், அம் மனிதர்களிலிருந்து இருபது மீற்றர் தொலைவிலேயே மயங்கி விழுந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
2002 ஆம்ஆண்டு நீல ஒளியை வெளியிடுகின்ற விசித்திரமான பொருளொன்று திம்புலாகலையில் தரையிறங்கியமை தொடர்பான தகவல்கள் நாம் யாவரும் அறிந்ததே.
1998 இல், பண்டாரவளையிலுள்ள பாடசாலையொன்றின் விளையாட்டு மைதானத்தில் வித்தியாசமான சத்தமொன்று கேட்டதாகவும் அதனைத் தொடர்ந்து தட்டுவடிவமான பொருளொன்றைக் கால்களுடன் கண்டதாகவும், அப்பொருள் சிவப்பு, மஞ்சள் நிற ஒளியை வீசியபடி மிகவும் வேகமாக வானில் பறந்து மறைந்ததாகவும் ஆண்டு மூன்றில் கல்விபயிலும் சிறுவனொருவன் விபரித்திருந்தான்.
பறக்கும் தட்டுக்களைப் பற்றி முன்னெப்பொழுதும் கேள்விப்பட்டிராத அச்சிறுவனின் கூற்றை எவராலும் மறுக்க முடியவில்லை. அதைத் தொடர்ந்து வயதில் பெரிய இன்னொரு சிறுவனிடமும், வேறு சிலரிடமும் விசாரித்த பொழுது பெறப்பட்ட தகவல்கள் ஏற்கனவே பெறப்பட்ட தகவல்களைப் போலவே இருந்தன.
அத்துடன் அத்தட்டு எட்டடி விட்டத்தையும் ஏழடி உயரத்தையும் உடையதென விபரிக்கப்பட்டது. பாடசாலையின் அதிபர், அவ்விசித்திரப் பொருளினால் நிலத்திலேற்பட்ட அடையாளங்களைப் புகைப்படமெடுத்திருந்தார். அத்துடன் அப் பிரதேசத்திற்குரியதல்லாத ஒருவகை வெள்ளை நிறப்பூச்சிகளும் இறந்து காணப்பட்டன.
1990 இல் தட்டுவடிவமான அடையாளம் காணப்படாத பொருளொன்று சமுத்திரத்திலிருந்து கிளம்பி வானை நோக்கிச் சென்றதாகவும், தமது கப்பலை ஏறத்தாழ 15 நிமிடங்கள் நிலைகுலையச் செய்திருந்ததாகவும் மாலுமியொருவர் தெரிவித்தார்.
இந்து சமுத்திரத்தில் மாத்தறையின் தென்பகுதியிலிருந்து 210 மைல் தொலைவிலேயே இச்சம்பவம் நிகழ்ந்தது. அப்பொருள் சமுத்திரத்திலிருந்து எழும்பியதாலேற்பட்ட பாரிய அலைகள் கப்பலின் புறக்கட்டமைப்பில் சேதத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன் அப்பொருள் கப்பலை விட ஐந்து மடங்கு பெரிதாக விருந்ததாகவும் வெள்ளி நிறமாக ஒளிவீசியதாகவும் அவர் கூறினார்.
கப்பலிலிருந்த உபகரணங்களும் திசை காட்டியும் பலதடவைகள் சுழன்றதாகவும் வானொலியைப் பயன்படுத்தி உதவி கோர முடியாமல் இருந்ததாகவும் 15 நிமிடங்களின் பின்னர் அப்பொருள் மாயமாக மறைந்து நிலைமை அமைதிக்குத் திரும்பியதாகவும் அவர் தெரிவித்தார்.
கடற்கரை அதிகாரசபை இப்பொருள் தொடர்பான ஆதாரங்களைச் சேர்ப்பதற்குப் பல வாரங்கள் முயன்ற போதிலும் எந்தவித ஆதாரங்களும் கிடைக்கவில்லை. இது அடையாளம் காணப்படாத பொருட்கள் தொடர்பான உத்தியோகபூர்வ அவதானமாகக் கருதப்பட்ட போதிலும் அதற்கான விளக்கங்களெவையும் வழங்கப்படவில்லை.
விண்வெளி ஆய்வுமையமாகிய நாசா இத்தகைய தட்டுக்கள் போன்ற பொருட்கள் இயற்கையின் தோற்றப்பாடுகளேயன்றி வேறல்ல என்று கூறுகிறது. எம்மைவிட்டு நீங்கிய விஞ்ஞானப் புனைகதை எழுத்தாளர்களின் முன்னோடியாகிய இலங்கையில் வாழ்ந்த விஞ்ஞானி ஆதர் சி. கிளார்க்கிடம் இத்தகைய பொருட்களைப் பற்றி வினவுகையில், அவர் பின்வருமாறு குறிப்பிட்டார்.
“காலநிலை மற்றும் ஒளி தொடர்பான சில நிபந்தனைகளின் கீழ் செவ்வாய், சந்திரன் போன்ற கோள்கள் இத்தகைய அடையாளம் காணப்படாத பறக்கும் பொருட்களாகத் தென்படலாம். நாசா விஞ்ஞானிகள் இத்தகைய எந்தவொரு நிகழ்வையும் வானில் அவதானிக்கவில்லை.
எமது புவியின் வானியல் எல்லைக்குள் வரும் எந்தவொரு புதிய பொருளையும் 5 நிமிடங்களுக்குள் இனங்காணக் கூடிய வகையில் நவீன தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. ஒரு மாலை வேளையில் காலிமுகத்திடலுக்குச் சென்று வான்பரப்பை அவதானித்தால் பல விதமான பொருட்களை, பல்வேறு வண்ணங்களில் அவதானிக்க முடியும்”
எமது நவீன தொழில் நுட்பங்களால் கண்டுபிடிக்க முடியாத வகையில் அவதானிக்கப்படும் இத்தகைய பொருட்களைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்கையில் தொழில்நுட்பத்தில் மனிதனைவிடப் பலமடங்கு முன்னேறியவர்கள். வேற்றுக்கிரகங்களில் இருப்பார்களோ என்றே எண்ணத்தோன்றுகிறது. விஞ்ஞானிகளைப் பொறுத்தவரையில் இது யதார்த்தத்திற்கு அப்பாற்பட்ட விடயமாகவே காணப்படுகிறது.
அவ் வேற்றுக் கிரகவாசிகளுடன் ஒப்பிடுகையில் மனிதனைப் பாலர் பாடசாலைக்குச் செல்லும் சிறுவனாகவே கருதுமுடியும். விஞ்ஞான யுகம், இலத்திரனியல் யுகம், நனோ யுகமென முன்னேறி வரும் மனிதனைப் பொறுத்தவரையில் அவனது அறிவுக்கு அப்பாற்பட்ட விந்தைகளென்றே இவற்றைக் கருத முடியும்.

No comments:

Post a Comment