Friday, January 14, 2011

பொங்கலின் பின்னணியில்...

கரும்பு சொல்லும் தத்துவம்


பொங்கல் திருநாளின் போது கரும்பு பெறும் முக்கியத்துவத்தையும் நாம் அறிவோம். ஆனால் கரும்பின் பின்னணியில் இருக்கும் தத்துவம் மிகப்பெரியது. கரும்பு இனிக்கும் என்பதே நாம் பொதுவாகக் கொண்டிருக்கும் அபிப்பிராயம்.
ஆனால் கரும்பின் அடிப்பகுதியிலிருந்து நுனி வரை சுவை ஒரேமாதிரி இருப்பதில்லை.
‘கனை கடல் தண்சேர்ப்ப கற்றறிந்தார் கேண்மை நுனியின் கரும்பு தின்றற்றே...’ என்று தொடர்கிறது நாலடியாரின் பாடலொன்று. நுனிக்கரும்பு உவர்ப்புச் சுவையுடையது.
ஆனால் அடிக்கரும்போ தித்திக்கும் இனிப்புச் சுவையுடையது. கற்றறிந்தோரின் நட்பும் நுனிக்கரும்பி லிருந்து அடிக்கரும்பு வரை சுவைப்பதைப் போன்றது என்கிறது அந்தப் பாடல்.
காலபோகத்திலே விவசாயி கொண்ட கடும் உழைப்பின் பயனே பொங்கலன்று அவன் பொங்கும் அரிசியாகும்.
அந்த உழைப்பின் தத்துவத்தையும் கரும்பு மிக அழகாக உணர்த்துகிறது. வாழ்க்கையும் ஆரம்ப காலங்களில் போராட்டமாக இருந்தாலும் முடிவில் இனிமையைத் தரவல்லது.
கரும்பின் வெளிப்பகுதியிலே எத்தனையோ வளைவுகளும் முடி ச்சுக்களும் இருக்கத்தான் செய்கி ன்றன. ஆனால் அதன் சாறு இனி ப்பானது. அதேபோல சோத னைகளைக் கடந்து சென்றால் தான் வாழக்கை தரும் இனிப் பைச் சுவைக்க முடியும்.
இவை கரும்பின் சுவையிலும் மேன்மையான தத்துவங்கள்.


சர்க்கரைப் பொங்கல் பொங்குவது ஏன்?


தை பிறந்தால் நினைவுக்கு வருவது தைப் பொங்கல். தைப் பொங்கலில் முதன்மை பெறுபவன் சூரியன் ஆவான். தைப் பொங்கலன்று தமிழர்கள் சர்க்கரைப் பொங்கல் பொங்கி சூரியனுக்குப் படைப்பதன் பின்னணியில் புராணக்கதை ஒன்று கூறப்படுகிறது.
தக்கனுடைய மகள் தாட்சாயணி என்பதும் அவளை ஈசன் மணம் முடித்ததும் நாம் அறிந்து விடயமே.
ஒரு முறை தக்கன் கைலாயம் சென்றிருந்த வேளை ஈசனைத் தரிசிக்க பிரம்மா, விஷ்ணு மற்றும் தேவாதி தேவர்களும் கூட வந்திருந்தார்கள். மாமனார் என்ற வகையிலே தன்னை ஈசன் விசேடமாகக் கவனிப்பான் என்று எண்ணியிருந்தான் தக்கன். அவ்வாறு நடக்காததால் அவனுக்குக் கிடைத்த ஏமாற்றம் கோபமாக மாறியது.
ஈசன் தன்னை அவமானப்படுத்தியதாக எண்ணிய தக்கன் ஈசனைப் பழிவாங்க எண்ணினான். பெருயாகமொன்றை ஏற்பாடு செய்திருந்தான். யாவரையும் அழைத்திருந்தான். தாட்சாயணியும் அந்த யாகத்திற்குப் போக எண்ணியிருந்தாள்.
ஈசனிடம் தனது எண்ணத்தைத் தெரிவித்திருந்தாள். ‘அவமானம் மட்டுமே உனக்கு மிஞ்சும்!’ என்றான் ஈசன். அதையும் மீறி தக்கனின் யாகத்துக்குச் சென்றாள் தாட்சாயணி. அவளைக் கவனிக்காது அவமானப்படுத்திய தக்கன், ஈசனையும் கேலி பேசினார்.
அங்கு வருகை தந்திருந்த சூரிய பகவான் உட்பட தேவர்கள் பெரிதாகச் சிரித்தனர். அவமானத் தைத் தாங்க முடியா தாட்சாயணி தன் யோக சக்தியால் அக்கினியைத் தோற்றுவித்து அதனுடன் சங்கமமானாள். இதை அறிந்து ஈசன் தன்னுடைய இன்னோர் அம்சமான வீரபத்திரரைத் தோற்றுவித்து யாகசாலையைத் துவம்சம் செய்யப் பணித்தார்.
தேவியை அவமானப்படுத்திய தேவர்களுள் சூரிய பகவான் முக்கியமானவர். சூரியனை நெருங்கிய வீரபத்திரர் “உனது வாய்தானே ஈசனை நிந்தித்தது? எனக் கேட்ட படி சூரிய பகவானின் கன்னத்தில் அறைந்தார். சூரியனின் பற்கள் விழுந்தன. அதன் பின்னர் பிரம்மன் வந்து யாரையும் சமாதானப் படுத்தினான்.
ஈசனை வழிபட்டு, மன்னிப்பு கோரிய தேவர்களை ஈசன் மன்னித்தருளினார். ஆயினும் சூரியன் மீது அவருக்கிருந்த கோபம் மட்டும் தணியவில்லை. ஆதலால் அவன் இழந்த பற்களை மீளப்பெற அவர் அனுக்கிரகமும் செய்யவில்லை. பல்லில்லாதவர்கள் உண்பதற்கும் சர்க்கரைப் பொங்கல் எளிமையாக இருக்குமல்லாவா? ஆதலால் தான் பொங்கல் திருநாளின் போது சூரியனுக்கு சர்க்கரைப் பொங்கல் பொங்கிப் படைக்கப்படுகிறது.


பச்சையரிசி சொல்லும் தத்துவம்


சாதாரணமாக நாம் சோற்றுக்குப் பயன்படுத்தும் அரிசியானது பதப் படுத்தப்பட்ட அரிசியாகும். அதா வது நெல்லை அவித்து உலர்த்திக் குற்றிய அரிசியாகும். ஆனால் மாறாக பச்சை யரிசியென்பது நெல்லை அவ்வாறு அவிக்காமல் குற்றிப்பெறப்பட் டதாகும். பச்சைய ரிசியைப் போன்று பக்குவப்படாத நிலையிலேயே நாங்கள் காணப்படுகி றோம்.
பச்சையரிசியைப் பொங்கியதும் சாப் பிடக்கூடிய பக்குவ நிலையை அது அடை ந்துவிடுகிறது. அதற்க மைய மனம் என்ற அடுப்பிலே இறைசிந்தனை என்ற நெருப்பைச் சுடர் விடச்செய்ய வேண்டும். இறைவன் விரும்பும் பிரசாதமாக நாம் மாற வேண்டும்.
அரிசியைத்தனியே வேகவைத்து சுவையான பொங்கலை ஆக்க முடியாது. பச்சையரிசியுடன் தேங் காய்ப்பால், சர்க்கரை, பயறு, நெய், கொடி முந்திரிகை மரமுந் திரிகை, ஏலக்காய் எல்லாம் சேர்ந் தால் தான் சுவைமிகுந்த பொங் கலாகும்.
உலகியல் இன்பங்களிலே திளைத்து ஆசைகளைச் சுமந்தபடி பக்குவமின்றி திரியும் சாதாரண மாந்தர் நாங்கள்.
பச்சையரிசியுடன் இதரபொருட்கள் சேர் ந்து சுவைமிகு பொங்க லாவதுபோன அன்பு, அருள், சாந்தம், கருணை, அமைதி, பொறுமை போன்ற நற்குணங் களை யும் எம்முடன் சேர்த் துக்கொள்ள வேண்டும்.
பக்தி எனும் பானை யிலே அக்குணங்க ளுடன் கூடிய எம்மை ஏற்றி ஞானம் என்ற நெருப்பிலே எம் மைப் பதப்படுத்தி னால் பொங்கல் போன்ற அருட்பிரசாதமாகி விடுவோம்.
இறைவனும் எம்மை உக ந்து ஏற்றுக்கொள்ளுவான்.

No comments:

Post a Comment