Thursday, June 17, 2010

பாலைவனமாதலையும் வரட்சியையும் தடுக்கும் தினம் இன்று




இம்முறை மண்ணை வளப்படுத்தி, எல்லா இடங்களிலும் உயிர்களை வளப்படுத்துவோம் எனும் தொனிப் பொருளில் உலகெங்கும் இத்தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

பாலைவனமாதல் தொடர்பான உண்மை நிலவரத்தை மக்களுக்குத் தெளிவுபடுத்தி நிலங்கள் தரமிழத்தல் மற்றும் வரட்சி காரணமாக உயிர்ப்பல்வகைமைக்கு ஏற்படும் இழப்பைத் தடுக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவதை இத்தினம் அடிப்படையாகக் கொண்டது.

ஏனெனில் வளமான மண் இருந்தால் மட்டுமே உயிர்கள் நிலைக்க முடியும். ஒவ்வொரு தனிநபரும் மண்ணை எங்ஙனம் பயன்படுத்துகிறார் என்பதிலேயே மண்ணின் ஆரோக்கியம் தங்கியிருக்கிறது.

நாம் உண்ணும் உணவின் அளவையும் தரத்தையும் கூட நாம் மண்ணில் மேற்கொள்ளும் செயற்பாடுகளே தீர்மானிக்கின்றன. அவற்றின் அடிப்படையிலேயே, சூழல்தொகுதி எமக்கு வழங்கும் சேவைகளும் அமைந்து விடுகின்றன.

No comments:

Post a Comment