Showing posts with label யாழ்ப்பாண வாழ்வியல். Show all posts
Showing posts with label யாழ்ப்பாண வாழ்வியல். Show all posts

Thursday, March 5, 2015

மரத்திலிருந்து விழுந்தவனை மாடேறி மிதித்த கதை




~~யாழைக் கொணர்ந்திங்கு மீட்டிய தால், ஒரு 
யாசகன் மன்ன னிடம் இருந்தோர் பாழைப் பரிசு பெற்றான்!" 
னக் கூறிடும் பண்டைப் பழங்கதை கேட்டதுண்டு 
பாழைப் பரிசு பெற்றாலும், அப்பாலையைப் 
பச்சைப்படுத்திப், பயன் விளைத்து,
வாழத் தொடர்ந்து முயன்றத நால், 
இன்றுவையத் துயர்ந்தது யாழ்ப்பாணம்! "
என யாழ் மண்ணின் மகிமையை எளிமையாய் விளக்குகிறது மகாகவி உருத்திரமூர்த்தியின் கண்மணியாள் காதை.தனக்கென தனித்துவமான கலாசார பாரம்பரியங்களைக் கொண் டிருக்கும் யாழ் மண்ணின் நீர்வளமும் 
நிலவளமும் தனித்துவமானவை என்பதில் ஐயமேதுமில்லை.தற்காலத்தில் இன மத பேதமின்றி நாடுகளையும் கடந்து தமிழர் வாழும் தேசம் எங்கிலும் பேசப்படும் விடயங்களுள் யாழ் மண்ணின் நீர்வளம் மிக முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது.

விவசாயத்தை நம்பியிருக்கும் யாழ் மண்ணின் நீர்வளம் இரசாயனங்களின் அதீத பாவனையாலும் சீரற்ற கழிவு முகாமைத்துவத்தாலும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. காலத்துக் குக்குக் காலம் ஊடகங்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் அதனை வெளிப்படுத்தி வருகின்றமையை அவதானிக்க முடிகிறது. ஆனால் நீர்வளம் பாதிக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எவற்றையேனும் யாராவது எடுத்திருக் கின்றார்களா என்பது தொடர்பில் அறிய முடியவில்லை.

இந்நிலையிலேயே யாழ் மண்ணின் நிலக்கீழ் நீருடன் எண்ணெய்க் கழிவுகள் கலப்பது தொடர்பிலே பல்வேறுபட்ட கருத்துகளும் செய்திக ளும் வெளியாகி வருகின்றன. சுன்னா கம் பகுதியை அண்டிய கிணறுகளின் நீர் பாவனைக்கு உகந்ததல்லாமல் போயுள்ளதாகவும் மிகவும் குறுகிய காலத்துக்குள் இந் நிலைமை ஏறத்தாழ 9 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு பரவியுள்ளதாகவும் அண்மை யில் பிரபல தனியார் ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.

2008 ஆம் ஆண்டளவிலே சுன்னாகம் தெற்கு விவசாயிகள் சம்மேளனம், அப்போதைய யாழ். மாவட்ட செயலாளருக்கு பிரதேச நிலத்தடி நீர் மாசடைந்து வருவதாக முறைப்பாடு தெரிவித்திருக்கிறது. மாவட்ட செயலாளரும் உடன் அறிக்கை சமர்ப் பிக்குமாறு மின்சாரசபைக்கு பணிப் புரை அனுப்பியிருக்கிறார்.

சுன்னாகம் பகுதியின் நிலத்தடி நீர் மாசடைந்து வருவது ஏறத்தாழ 7 ஆண்டுகளுக்கு முன்னரே வெளித் தெரியத் தொடங்கியிருக்கிறது என்பத ற்கு அக்கடிதங்கள் சான்று பகர் கின்றன. ஆனால் கடந்த ஒரு வருட காலத்துக்குள் நிலத்தடி நீர் மிக வேகமாக பாதிப்படைந்து வருவதை பலராலும் உணர முடிந்திருக்கிறது.

இலங்கை மின்சார சபையின் மின் உற்பத்தி/விநியோக கட்டடம் சுன்னா கம் பகுதியிலே அமைந்திருக்கிறது. இலங்கை மின்சார சபையோடு இணைந்து செயற்படும் நிறுவனமாக 'ழேசவாநசn Pழறநசள' என்ற நிறுவனம் இருக்கிறது. தற்போது அனைவரது பார்வையும் இந்த நிறுவனத்தின் மீதே திரும்பியுள்ளது என்று சொன்னா லும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

யாழ். நிலக்கீழ் நீரிலே எண்ணெய் மாசு என்று எங்கெல்லாம் பேசப்படு கிறதோ அங்கெல்லாம் அனைவரது சுட்டு விரல்களும் இந்த நொதேர்ன் பவர் நிறுவனத்தை நோக்கியே நீளுகின்றன.
இவை பற்றியெல்லாம் ஆராய முன்னர், யாழ். மண்ணின் நிலக்கீழ் நீர் வளம் பரம்பியிருக்கும் விதம் பற்றி அறிய வேண்டியது அவசியமாகிறது.

யாழ் மண்ணின் நிலக்கீழ் நீர்வள மானது சுன்னாகம், வடமராட்சி கிழக்கு, சாவகச்சேரி, ஊர்காவற்றுறை என நாங்கு வலயங்களாகப் பிரிந்து காணப்படுகிறது. சுன்னாகம் வலயத் துக்குரிய நிலக்கீழ் நீரின் கொள் ளளவே ஏனைய வலயங்களுக் குரியனவற்றிலும் அதிகமானதாக இருக்கிறது.
யாழ்ப்பாண மக்கள் தமக்கான தனித்துவத்தை நிலை நிறுத்த ஆரம் பித்த காலத்திலிருந்தே நிலக்கீழ் நீரினை செவ்வனே திட்டமிட்டு பயன் படுத்தி வந்தனர். இயற்கையான ஆறு கள் எவையும் இல்லாத நிலையில் மழையையும் அதனால் செறிவூட் டப்படும் நிலக்கீழ் நீரையும் மட்டுமே நம்பி எம் மக்கள் ஒரு தன்னிறைவுப் பொருளாதாரத்தை நிறுவியிருந்தனர் என்பது ஆச்சரியப்படவேண்டிய விடயம்.

'சாத்திரம் புதியவை
கண்டவர் எடுத்த
சூத்திரம் பொருத்தினர் கிணற்றில்,
பார்த்தவர் மகிழ்ந்து பல
புகழ்ந் திடவே!
மாடிரண் டே சுற்றிச் சுற்றி வர,
மக்களின் முன் அவர்
கண்ணெதிரே,
பாடு படாமல் இருக்கையிலே
பாதாளம் சென்று நன் நீர் எடுத்தே,
ஓடிச் சுழன்று திரும்பினவாம்;
வாய்க்காலில் ஒவ்வொன்றாய்
ஊற்றினவாம் -
~~வேடிக்கை தான் அந்த வாளி!"
என்றே
மெச்சினர் கண்டவர் யாவருமே.''

என்று அதை மீண்டும் உறுதி செய்கிறது மகாகவி உருத்திர மூர்த்தியின் கண்மணியாள் காதை.
மிகப்பெரிய கொள்ளளவையுடைய சுன்னாகம் நிலக்கீழ் நீர் அப்பிரதேச மக்களின் அடிப்படைத் தேவைகளை மட்டுமன்றி விவசாயத் தேவை களையும் பூர்த்தி செய்து வந்தது. பெருந்தோட்டங்களுக்கும் வளமான செம்மண்ணுக்கும் பெயர்பெற்ற இப் பூமியிலே தான் மக்களின் மின்சாரத் தேவையைப் பு+ர்த்தி செய்வதற்கான வலு நிலையங்களும் அமைக்கப் பட்டன.
நாட்டிலே சில தசாப்தங்களாகத் தொடர்ந்த யுத்த சூழ்நிலை காரண மாக நீர் மின்னைப் பயன்படுத்தும் வாய்ப்பு யாழ்ப்பாணத்துக்கு கிடைக் கவில்லை. ஆதலால் எண்ணெயின் துணையுடன் மின் பிறப்பாக்கிகள் இயக்கப்பட்டே யாழ். மண்ணின் அடிப்படை மின்சாரத்தேவை பூர்த்தி செய்யப்பட்டது. காலத்துடன் தேவைகள் அதிகரிக்க ஒன்றுக்கு மேற்பட்ட மின் பிறப்பாக்கிகள் இணை க்கப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டது.
இலங்கை மின்சார சபையினாலேயே இம்முயற்சி முன்னெடுக்கப்பட்டது. அந்த வகையிலே 2000 ஆம் ஆண் டின் பின்னர் இலங்கை மின்சார சபையுடன் இணைந்து 'nothern power' நிறுவனமும் யாழ். மண்ணுக் கான மின்சார விநியோகத்தில் பங்கெடுத்தது.

சுன்னாகத்தில் அமைந்திருக்கும் வலு நிலையத்திலே வௌ;வேறு சந்ததிகளைச் சேர்ந்த மின் பிறப்பாக் கிகள் பாவனையில் இருந்திருக்கி ன்றன. முதலாவது சந்ததியைச் சேர்ந்த மின்பிறப்பாக்கிகளின் பாவனை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் தசாப்தங்களாக நிகழ்ந்த அவற்றின் பாவனையின் போது கழிவு எண்ணெய் வெறுமனே நிலத்தில் கலக்க விடப்பட்டதாக இலங்கை பொறியியலாளர் நிறுவக ஆய்விலே அறிக்கையிடப்பட்டு அண்மையில் யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த கலந்துரையாடல் ஒன்றிலே முன்னளிக்கப்பட்டிருந்தது.

தற்போதும் பாவனையில் இருக்கும் இரண்டாவது சந்ததியைச் சேர்ந்த, பிறப்பாக்கிகள் தொடர்பில் எந்தவொரு நம்பிக்கைத் தன்மையும் இல்லாதிருப்ப தாகவே அந்த முன்னளிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இங்கு தான் 'Northern power' நிறுவனத்தினுடைய வகிபாகம் முன்னிலை பெறுகிறது. ஏனெனில் இந் நிறுவனத்தி னால் பாவிக்கப்படுபவை இத்தகைய இரண்டாவது சந்ததிக்குரிய இயந்திர ங்களேயாகும்.
பல ஊடக அறிக்கைகளிலே தமது நிறுவனத்தின் கழிவு எண்ணெயைத் தாம் விற்றுப் பணமாக்குவதாகவும் சுற்றுச் சூழல் விதிமுறைகளுக்கமையவே தாம் தொழிற்படுவதாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தி ருக்கிறார்கள். அக்கருத்துகளின் உண்மைத் தன்மையை வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளால் மட்டுமே உறுதி செய்ய முடியும்.

'உத்துறு ஜனினி' என்ற பெயரிலே மிக அண்மையில் இலங்கை அரசுக்குச் சொந்தமான மின் பிறப்பாக்கி/ வலு நிலையம் ஒன்று சுன்னாகத்திலே 2013 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. இந்த நவீன அமைப்பு சுற்றுச் சூழல் விதிமுறைக ளுக்கமைய கழிவுகளை வெளியேற்று வதாக அதே முன்னளிக்கை உறுதி செய்கிறது.
அப்பகுதியில் குடி நீர் விநியோக த்தை மேற்கொள்ளும் தேசிய நீர் வடிகாலமைப்புச் சபை கூட, தனது நீர் மூலம் மாசடைந்திருப்பதைக் கண்டறி ந்து நீர் விநியோகத்தை நிறுத்தியி ருக்கிறது.
காலத்துக்குக் காலம் எடுக்கப்பட்ட செய்மதிப் படங்கள் அண்மையில் இணையத்திலே வெளியாகியிருக்கி ன்றன. ஆரம்பத்தில் எண்ணெய்க்கழிவுகள் நிலத்திலே வெளியேற்றப்பட்டிருந்தமையும் பிற்காலத்தில் அவை மூடப்பட்டு அப்பகுதியில் கட்டட வேலைகள் நடைபெற்று முடிந்தமை யையும் அப்படங்களில் தௌ;ளத் தெளிவாகப் காண முடிகிறது.

எம் மக்கள் கடந்து வந்திருக்கும் காலங்களில் தம் குறைகளை வெளிப்படுத்த முடியாமலிருந்த காரணங்களினாலோ என்னவோ இப்பிரச்சினை பாரிய அளவில் வெளித்தெரியாமல் காணப் பட்டது. கண் கெட்ட பிறகு தான் சூரிய நமஸ்காரமோ என்று வருந் தத்தகு வகையிலே தற்போது தான் வெளித்தெரியத் தொடங்கியிருக்கிறது. அவ்வாறு வெளித்தெரியும் வேகத்தை விஞ்சும் வகையிலே எண்ணெய் மாசு நிலக்கீழ் நீருடன் கலந்து வருகிறது.

நிலக்கீழ் நீரானது நிலத்துக்குக் கீழே ஒரு ஊற்றுப்போல் காணப்படும். அந் நீரிலே மாசு கலக்கத்தொடங்கி னால் அந்த ஊற்று செல்லும் இட மெல்லாம் இம்மாசு மிக வேகமாகப் பரவத் தொடங்கும். வலி வடக்கை அண்டிய பகுதிகளில் பாவனைக்கு உதவாத காரணத்தால் கிணறுகள் கைவிடப்பட்டு வருகின்றமைக்கு இதுவே காரணமாகும்.

வலி வடக்கையும் தாண்டி சுன்னா கத்திலிருந்து 10-11 கிலோமீற்றர் தூரத்திலுள்ள கிணறுகளிலிலும் இதே பிரச்சினை காணப்படுவதாக முக நூல் நண்பர்களின் விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.
நிலைமை இப்படியே தொடர்ந்து கொண்டிருக்கும் பட்சத்தில் அதனை எவ்வாறு கையாளப்போகிறோம் என் பது தொடர்பில் ஒரு திட்டத்தை விரை வாகத் தயாரிக்க வேண்டிய பாரிய பொறுப்பு சம்பந்தப்பட்ட அதிகாரத் தரப்புக்கு இருக்கிறது. அந்த அதி காரத்தரப்பிலே மாகாண , மத்திய நிர்வாக அலகுகள் உள்ளடங்குகின் றன. மாவட்ட செயலகம், உரிய பிரதேச செயலகங்கள், உரிய உள்ளூராட்சி சபைகள், பிராந்திய சுகாதாரசேவைகள் திணைக்களம், தேசிய நீர் வடிகாலமைப்பு சபை, மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை , உரிய மாகாண அமைச்சுகள், உரிய மத்திய வரிசை அமைச்சுகள், எல்லா வற்றுக்கும் மேலாக இலங்கை மின்சார சபை என யாவுமே பொறுப்பு க்கூற வேண்டிய நிறுவனங்களாகும்.

எண்ணெய்க் கழிவு நீருடன் கலப்பதால் நேரடியாகவும், மறைமுக மாகவும் பல எதிர் விளைவுகள் உருவாகப் போகின்றன என்பது கண்கூடு. பொதுவாக என்ன நடக்கும் என்பது பற்றியும் நாம் அறிந்திருத்தல் தகும்.
பாதிக்கப்பட்ட கிணறுகளின் நீரை ஆய்வு செய்ததில் ஏறத்தாழ 10 சதவீதமான கிணறுகளில் அனுமதிக ;கப்பட்ட அளவுக்கும் அதிகமாக ஈயம் இருப்பதையும் 12 சதவீதமான கிணறுகளில் அனுமதிக்கப்பட்ட அளவு க்கும் அதிகமாக குரோமியம் நீரில் கலந்திருப்பதாக தேசிய நீர் வடிகாலமைப்பு சபையின் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
அதே வேளை ஏறத்தாழ 73 சதவீதமான கிணறுகளில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் அதிக மாக கிறீஸ், எண்ணெய் ஆகியன கலந்திருப்பதாகவும் அவ்வாய்வு முடிவிலே அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சுன்னாகம் பகுதி விவசாயத்துக்கு மட்டுமன்றி இரசாயனங்களின் மிகை யான பாவனைக்கும் பெயர் போன பகுதியாகும். அதன் காரணமாக இங்குள்ள கிணறுகளில் அனுமதிக்கப் பட்ட அளவுக்கும் அதிகமான நைத்தி ரேற்றின் செறிவும் அவதானிக்கப்பட்டுள்ளது.

குடிநீரிலே நைத்திரேற்றின் செறிவு அதிகரிப்பதால் நீலக்குழந்தைகள் பிறப்பது அதிகரிக்கும். 6 மாதத்துக் குட்பட்ட குழந்தைகள், முதியோர், கர்ப்பிணித்தாய்மார் போன்ற தரப்பி னரை இந் நிலைமை வெகுவாகப் பாதிக்கும்.
எண்ணெய் கலந்திருக்கும் நீரை குடிப்பதற்குப் பயன்படுத்த முடியாது. அதேவேளை விவசாயத்துக்குப் பயன் படுத்தினால் விவசாய முயற்சி வெற்றியளிக்கும் சாத்தியக் கூறுகள் குறைவடையும். அதே வேளை நிலமும் மாசடயத் தொடங்கும். நீரிலே உள்ள நன்மை பயக்கும் உயிரிகள் இறக்க நேரிடும் . மிக நீண்டகால அடிப்படையில் நோய்கள் பல ஏற்படும் சாத்தியக் கூறுகள் அதி கம் காணப்படும். நிலக்கீழ் நீரிலே எண்ணெய்க்கழிவுகள் கலக்க நேரிட்டால் அவை ஏறத்தாழ 250 வருடங்களுக்கு நிலைத்திருக்கும் என செஸ்டர் டி ரெயில் என்பவர் தனது நூலிலே குறிப்பிடுகிறார்.

ஈயம் என்பது உயிரியல் ரீதியாக மனித குலத்துக்கு எந்தவொரு நன் மையும் பயக்காத உலோகமாகும். அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான ஈயத்தை நாம் உள்ளெ டுத்தல் மிக ஆபத்தானது. மனித உடலிலே நரம்புத்தொகுதி, இனப் பெருக்கத்தொகுதி உட்பட பல்வேறு தொகுதிகளில் செயற்பாடுகளை ஈயம் பாதிக்கும். எலும்புகளிலே ஈயம் படிந்து சேமிக்கப்படும். கர்ப்பத்திலிருக்கும் குழந்தைகளினதும் சிறார்களின தும் மூளை வளர்ச்சியில் பின்னடை வைத் தோற்றுவிக்கும்.சிறார்கள் மத்தியில் மெல்லக் கற்றல், மன நிலை பாதிப்பு, பழக்க வழக்கப் பிரச்சினைகள் போன்ற குணப்படுத்த அரிதான குறைபாடு களை ஏற்படுத்தும்.

அதிகமான குரோமியத்தை (அயன்/ உலோகம்) உள்ளெடுத்தால் சுவாசப் பாதையில் புற்று நோய் உருவாகும் வாய்ப்பு மிக அதிகம் என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்திருக்கிறது.நிலக்கீழ் நீரின் மாசின் எதிர்விளைவுகள் இப்படி இருக்க, அம்மாசை அகற் றுவதற்கும் பலதரப்பட்ட நடைமுறைகள் உலகளா விய ரீதியிலே பயன்பாட் டில் இருக்கின்றன. அவற் றில் பல மிக எளிதான நடைமுறைகளாகும்.

கதிர்த்தொழிற்பாட்டு காபனைப் பயன்படுத்தி சேதனப் பகுதியை உறிஞ் சச் செய்து வடிகட்டல், மென்சவ்வு முறைமை, புவியீர்ப்பின் கீழ் வேறாக் கல், புற ஊதா கதிர்களின் மூலமான வடிகட்டல், நுண் வடிகட்டல், பக் டீரியா, பங்கசு, தாவரங்கள் மூலம் எண்ணெய் மாசை நீக்கல் போன்ற பல்வேறுபட்ட முறைமைகள் உலகளா விய ரீதியிலே பின்பற்றப்படுகின்றன.

நிலக்கீழ் நீர் மாசடைந்து வருகிறது என்பது தற்போது வெளிப்படையாகத் தெரிய வந்துள்ளது.
அம்மாசைக் கட்டுப்படுத்த வேண் டிய, இல்லாமல் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதையும் எம்மால் உணர முடிகிறது. ஆகவே நாம் தாமதிக்காமல் முதலில் செய்ய வேண்டியது மாசின் மூலத்தை கண்டு பிடித்தல் ஆகும்.
அதற்கு போதிய தொழில் நுட்ப வசதிகள் இலங்கையில் இல்லாத காரணத்தால் ஆய்வுகளை மேற் கொள்ள கடந்த வாரம் இலங்கை வந்திருந்த நோர்வே நாட்டுக் குழுவி னரிடம் உரிய உபகரணங்களை வழங்கியுதவுமாறு கைத்தொழில் தொழில் நுட்ப நிறுவகம் கோரியிருந் தது.

இம்மாசாதல் தொடர்பிலும் அத னைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் தொடர்பிலும் வெளிப்படையான தொடர் ஆய்வுகள் அவசியமாகின்றன. அவற்றை வழி நடத்துவதில் யாழ். பல்கலைக் கழகத்துக்கும் வட மாகாண சபைக்கும் பாரிய பொறுப்பி ருக்கிறது.இம்மாசாதல் தொடர்பில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு கிடைக்க வேண்டும். எங்கும் எதிலும் வெளிப் படைத் தன்மை பேணப்பட வேண்டும். தற்போது கிடைத்திருக்கும் சுதந்திர சூழலை ஊடகங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமது விற்பனைக் காகவும் அரசியல் சுய நல நோக்கங்களுக்காகவும் பொதுமக்களைப் பாவிப்பதை நிறுத்தி தமது பிரசுரங்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும்.

இன்றைய நிலையில் இப்பாதிப்புகள் குறித்து நோக்குகையில் நாம் இரு ண்ட எதிர்காலத்தை நோக்கிப் பயணி த்துக் கொண்டிருக்கிறோம் என்பது மட்டுமே தெளிவாகிறது. இனி வரும் நூற்றாண்டுகளில் பிறக்கப்போகும் எம் குழந்தைகளுக்கான புதை குழியை இப்போதே தோண்டி வைத்து விட்டோமோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது. நாம் இனியும் விழித்தெழா விட்டால் எம்மைத் தூற்றுவதற்குக் கூட வளமான எதிர்காலச் சந்ததியொன்று இருக்குமா என்பது கேள்விக்குறியே!

Sunday, November 6, 2011

கண்ணைக் குளமாக்கிய மண்ணின் வாழ்வியல்-5


உணராவிட்டால் உய்வில்லை

பணமிருந்தால் சாதிக்கலாம் என்ற கொள்கை எம்மவரிடத்தே பரவ லாகக் காணப்படும் போது, இயற்கையோடு இயைந்த, சுற்றுச்சூழலு டன் நட்புறவான வாழ்வியலைப் பற்றி யார் சிந்திப்பார்கள்? ஏதோ ஒரு போதைக்குள் அருண்டு போயிருக்கும் எம் சமூகத்தை யாழ்ப்பாண வாழ்வியல் கண்காட்சி சிந்திக்க வைத்திருக்கிறது. ஆர்வலர்களுக்குக் கிடைத்திருக்கும் உன்னத வாய்ப்பு இது.
இதையே தக்க தருணமாகக் கொண்டு மக்கள் மத்தியில் பனம் பொருட்களின் பாவனை பற்றி விளக்க அவர்கள் முன்வர வேண்டும். அவற்றின் பாவனையை அதிகப் படுத்தவேண்டும்.
இது பனம் பொருள் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும். அவர்களது வாழ்க்கைத்தரம் மேம்பட வழிவகுக்கும். அதே வேளை எமக்கே உரித்தான கலையாகக் கருதப்படும் பனம் பொருள் உற்பத்தி தொடர்பான நுணுக்கங்கள் அடுத்த சந்ததிக்கு கடத்தப்படும். எமது சுற்றுச்சூழலும் பாதிக்கப்படாது. சம்பந்தப்பட்ட அதிகாரத்தரப்பு இவற்றை எல்லாம் பற்றிச் சிந்திக்க வேண்டும்.
எந்த மேற்குலகு பொலித்தீன், பிளாஸ்டிக் பாவனைகளை கீழைத்தேய நாடுகளில் அறிமுகப்படுத்தியதோ, அதே மேற்குலகு தான் இன்று பசுமை வாழ்வியலைக் கடைப்பிடிக்கிறது. ஆனால் மாறாக பரம்பரை பரம்பரையாகக் கைக் கொண்டு வந்த பசுமை வாழ்வியலை நாம் கை கழுவி விட்டிருக்கிறோம். அதேவேளை, மேற்குலகு கழித்து விட்ட வாழ்வியலைப் பெருமையாகப் பின் பற்றுகிறோம். அதே மேற்குலகு இன்று எல்லாத் துறைகளிலும் பசுமையை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
ஏதோ புதிய துறைகள் போலும் என எண்ணி நாமும் அவற்றை நாடுகிறோம். சுற்றுச் சூழல் கெடாமல் இருப்பதற்காக புதிய தர நிர்ணயங்கள் உருவாகிவிட்டன. அவற்றைப் பின்பற்ற அல்லாடுகிறோம். அப்போதும் கூட அந்த அடிப்படை உண்மை எமக்கு விளங்குவதாகத் தெரியவில்லை. நாம் கை விட்ட வாழ்வியல் வர்த்தக நோக்குடன் எம் மீது திணிக்கப்படுகிறது.
அது எமக்கே உரித்தான வாழ்வியல் பாங்கு என்று தெரியாமல் அதைப் பின்பற்ற நாம் படும்பாடு சொல்லிலடங்கா ஏனெனில், அந்த வாழ்வியல் எப்போதோ எம்மை விட்டு வெகு தொலைவுக்குச் சென்று விட்டது. இலகு வழிகளையும் பணத்தையும் மட்டுமே நோக்கி நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். இதை நாமாக உணர்ந்து மீளாவிட்டால் உய்வே இல்லை எனலாம்.
பட்டை, பிழா, தொப்பி, தட்டுவம், வெங்காயக் கூடை, உறி, பெட்டி, மூடு பெட்டி, கொட்டைப் பெட்டி, கூடை, கடகம், பாய் என வகை வகையாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்த அந்த பனை உற்பத்திப் பொருட்கள் எம்மை வெட்கித் தலை குனிய வைத்தன என்று தான் கூற வேண்டும். எத்தனை உன்னதமான வாழ்வைத் தொலைத்து விட்டிருக்கிறோம் என உள்ளூணர்வு உறுத்தியமையும் கூட தவிர்க்க முடியாததாகியது.
அந்தக் காட்சி அரங்கைக் கடந்து சென்ற போது அமைக்கப்பட்டிருந்த அரங்கிலே யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய வாழ்க்கை முறையை வெளிப்படுத்தும் பலதரப்பட்ட பொருட்களும் புகைப்படங்களும் வைக்கப்பட்டிருந்தன. யாழ்ப்பாணத்திலே புழக்கத்திலிருந்த நிறுத்தலளவைகள் எல்லாம் மெள்ள மெள்ள வழக்கொழிந்து போய்க் கொண்டிருக்கின்றன. நாழி, கால்படி, அரைப்படி என அரிசி அளப்பதில் தொடங்கி அன்றாட சமையல் பொருட்களை அளப்பதுவரை பயன்படுத்தப்பட்ட அளவைகள் பல அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
வெற்றிலையும் பாக்கும் எம்மவர் மத்தியில் வெகு சகஜமான புழக்கத்திலிருந்தன என்று கூறலாம். அதை இக்கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த பாக்குவெட்டிகள், பாக்கு இடிக்கும் உரல், சுண்ணாம்பு கிண்ணம் போன்ற உபகரணங்கள் தெளிவாகக் கூறின. அவ்வுபகரணங்கள் சிறியனவாயினும் எத்தனை நுட்பங்களுக்கமைவாக, எத்துணை சிறப்பான உத்திகளுடன் கலை நயமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன என்று எண்ணிப் பார்த்தால் வியப்பு மட்டுமே மிஞ்சும்.
அந்த உபரகணங்கள் எம்மவர்களுக்கு எவ்வளவு முக்கியமானவையாக இருந்தன என்பதை அவை வடிவமைக்கப்பட்டிருக்கும் பாங்கு எடுத்தியம்பும். ஒவ்வொன்றிலும் பல வடிவமைப்புகள் என்று கூறுதல் தகும். புகைத்தல் தட்டங்களும் கூட வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் பெரும்பாலானவை பித்தளை, இரும்பு போன்ற உலோகங்களால் ஆனவை. உலோகக் கத்திகள், கொக்கை சத்தகம், காம்புச் சத்தகம், உலோகக் கரண்டிகள், பால் வடிகள் என எண்ணற்ற பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
காலனித்துவ ஆட்சிக் காலத்திலே அறிமுகமாகிய வெண்களி, கண்ணாடிச் சாடிகள் பலவும் அவற்றுள் அடங்கும். அதே காலத்தில் தான் சோடியம் செலோலைட் நீர் வடிகட்டியும் அறிமுகப்படுத்தப்பட்டது. வெண்களியினாலான அந்த குடி நீர் வடி கட்டியைப் பார்த்த போது பால்ய கால நினைவலைகள் உள்ளக்கரையைத் தொட்டுச் சென்றன.
மூங்கில் பிட்டுக் குழல், அதில் அவிக்கும் பிட்டின் சுவையை எண்ணி வாயூற வைத்தது. வடக்கிலே மின்சாரத்தை நினைத்துப் பார்க்க முடியாத காலம் ஒன்று இருந்தது. அப்போதெல்லாம் ஆடைகளை அழுத்துவதற்குக் கைகொடுத்தவை சிரட்டைக் கரி அழுத்திகள் தான். வார இறுதி நாட்களில் சிரட்டை எரித்து பாடசாலைச் சீருடைகளை அழுத்துவது ஒரு தனி வேலை. அரங்கிலே வைக்கப்பட்டிருந்த கரி அழுத்திகளைக் கண்டபோது மனம் பள்ளி நினைவுகளை மீட்டது.
வட இலங்கைக் கடற் சூழல் தொகுதி இன்றும் கூட உயிர்ப்பல்வகைமை செறிந்ததாகக் காணப்படுகிறது. கடல் வாழ் உயிரினங்களின் வெளியோடுகளை, அழகுக்காக மட்டுமன்றி வேறுபல தேவைகளுக்காகவும் எம்மவர்கள் பயன்படுத்தினர். அத்தகைய அபூர்வ சங்குகள் கூட காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மரம், உலோகத்தாலான பாதரட்சைகள் சிலவற்றையும் காணமுடிந்தது. பாதரட்சை என்றால் முனிவர்கள் மட்டும் தான் அணிவார்கள் என்ற எண்ணப்பாடுகளைக் கொண்டிருந்த இன்றைய இளஞ்சந்ததியர் அவற்றைப் புதினமாகப் பார்த்தமையையும் காண முடிந்தது.
நூற்றாண்டு பழைமையான ஏடுகளைக் கட்டுக் கட்டாகக் காண முடிந்தது. அவை எல்லாம் எம் வரலாற்றின் தொன்மையை எடுத்தியம்பின எனலாம். ஏடுகளைப் பாதுகாப்பாக வைப்பதற்குரிய பெட்டி வியக்க வைத்தது.
ரங்குப் பெட்டிகள் என அன்றாடப் பேச்சு வழக்கில் அழைக்கப்படும் ட்ரங்க் பெட்டிளும் பெட்டகமும் கூட வைக்கப்பட்டிருந்தன. 100 வருடங்கள் பழைமையான மண்ணெண்ணெயும் கண்ணாடிச் சாடியும் பார்வையாளர்களைக் கவர்ந்தன. சென்ற நூற்றாண்டிலே பாவனையிலிருந்த புடவைகள் பொம்மைகளுக்கு உடுத்தப்பட்டிருந்தன.
இந்த கண்காட்சி அரங்கிலே வைக்கப்பட்டிருந்த பொருட்களில் பெரும்பாலானவை தற்போது யாழ்ப்பாணத்திலே வசித்து வரும் பொது மக்களிடமிருந்து பெறப்பட்டவை.
இத்தனை இடப்பெயர்வுகள், அழிவுகளைக் கடந்து வந்திருக்கும் அம்மக்களிடமிருந்து இவ்வளவு பொருட்கள் பெறப்பட்டிருக்கின்றன. எனில் நாம் சில விடயங்கள் பற்றி சிந்தித்தேயாக வேண்டும்.
காலங்காலமாக, ஊர் விட்டு ஊர் ஓடி, அழிவுகளுக்கும் திருட்டுகளுக்கும் முகங் கொடுத்த தற்போது தான் ஒரு அமைதி நிலையை அடைந்திருக்கின்றனர் எம் மக்கள். அப்படியாயின் இவற்றை ஒத்த எத்தனை பொருட்கள் அன்று அவர்களிடம் இருந்திருக்கும் என எண்ணியாவது பார்க்க முடிகிறதா? இவ்வளவு துன்பங்களின் பின்னரும் பணத்தாசைக்கு விலை போகாமல் மூதாதையர்கள் தமக்காக விட்டுச் சென்ற சொத்துக்களை பேணி வைத்திருக்கும் இம் மக்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
அந்த ஒரு சிலரிடம் காணப்பட்ட விழிப்புணர்வும் பொறுப்பும் மற்றவர்கள் கற்றுக் கொள்ள வேண்டியவை.