Sunday, June 26, 2011

அமெரிக்காவிலும் ஒரு புகுஷிமா?


  
அமெரிக்காவில் இருக்கும் மிசூரி நதி உலகின் 15 ஆவது பெரிய நதி. ஏறத்தாழ 2340 மைல்கள் நீளமானது. அதன் மூலத்திலிருந்து ஆரம்பித்து மிசிசிப்பி ஆற்றிலே கலக்கிறது. ஏறத்தாழ 10 மில்லியன் மக்கள் இந்த ஆற்றினால் பயன் பெறுகிறார்கள்.1673 இலே தான் ஐரோப்பியர்கள் இந்த நதியைக் கண்டு பிடித்தார்கள்.

நதி என்றால் பெருக்கெடுக்கத்தான் செய்யும். அப்படி இருக்கையில் மிசு+ரி ஒன்றும் விதிவிலக்கல்லவே. நதி ஒன்று பெருக்கெடுத்து அழிவுகள் பாரதூரமானவையாக அமையும்போது அது வரலாற்றிலே பதியப்படும். மிசூரி நதி பெருக்கெடுப்பது ஒன்றும் அமெ ரிக்காவுக்கு புதிதல்ல. 1881, 1953, 1993 ஆகிய ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் (2011 ஜூன்) மிசூரி நதியின் பெருக்கு கட்டுக்கடங்காமல் போயிருக்கிறது. இவ்வருடத்தின் இலை துளிர், கோடைக்கால ஆரம்பத்தில் ஏற்பட்ட தொடர் மழையால் மிசு+ரி நதியில் வெள்ளம் பெருக்கெடுத்திருக் கிறது. நீரின் அளவு நதியின் கொள் ளவை மீறியதால் குடியிருப்புப் பகுதி களுக்குள் நீர் புகத் தொடங்கியிருக் கிறது. நீரின் போக்கைத் தாக்குப் பிடிக்க முடியாத நீர்த்தேக்கங்கள் உடைப்பெடுக்கும் அபாயத்தை எதிர் நோக்கியுள்ளன. அத்தகைய 6 அணைக் கட்டுகளின் வான் கதவுகள் தற்போது திறந்து விடப்பட்டுள்ளன. நதி நீர் மட்டம் இன்னும் சில அடிகள் உயரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 1993 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது நதியின் ஆழம் 44.3 அடிகளாக இருந்தது. அதுவே நதியின் மிகக் கூடிய ஆழமாகக் கருதப்பட்டி ருந்தது. ஆனால் தற்போது ஏற்பட்டி ருக்கும் வெள்ளம் அந்தப் பதிவையும் வென்று நதியின் ஆழத்தை 44.4 அடிகளாக்கியிருக்கிறது.

மனிதன் இயற்கைக்குப் புறம்பாகத் தொழிற்படும் போது தான் இயற்கை யின் சீற்றத்துக்கும் ஆளாகிறான். இந்த உண்மை மிசூரி நதியின் வெள் ளப்பெருக்கிலும் தெளிவாகத் தெரிகிறது. பல மில்லியன் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மக்கள் பலர் தற்காலிகமாக வேறு இடங்களுக்குச் சென்றிருக்கிறார்கள். பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. வீதிகள், புகைவண்டிப்பாதைகள் பல சேதமடைந்திருக்கின்றன. வெள்ளம் பெருகாமல் தடுக்க மண் மூடைகளை அடுக்குகின்றனர். மரக்கட்டைகளை எரிக்கின்றனர். இந்த வெள்ளப் பாதிப்பு களின் தாக்கம் நீண்டகால நோக்கிலே வெளிப்படும் என நம்பப்படுகிறது. அதே வேளை உலகளாவிய ரீதியி லும் பல பின்னடைவுகளைத் தோற்று விக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

நதியில் நீரின் போக்கு அதிகரித்த மையானது, அருகிவரும் மீனினங்கள் சில பெருகும் வாய்ப்பையும் ஏற்படுத்தி யிருக்கிறது. இவையெல்லாம் இப்படி யிருக்க மிசூரி நதியின் பெருக்கெடுப் பானது நெப்ராஸ்கா என்ற பகுதியை இன்னொரு புகுஷிமாவாக மாற்றிவி டுமோ என்ற ஊகங்கள் பலவும் எழுந்துள்ளன. ஏனெனில் உலகின் மிகப்பெரிய அணுசக்தி நாடு அமெரி க்காதான். காரணம், ஜப்பானில் உள்ளதைப் போல பல மடங்கு அதிக அணு உலைகளை தனது கடற்கரை நகரங்களில் உருவாக்கி வைத்துள்ளது அமெரிக்கா. மியாமியில் தொடங்கி அத்திலாந்திக் சமுத்திரத்தை ஒட்டியுள்ள அமெரிக்கக் கடற்கரை முழுவதும் 30க்கும் மேற்பட்ட அணு சக்தி நிலையங்களும் அவற்றில் நூற்றுக்கும் மேற்பட்ட அணு உலைகளும் நிறுவப்பட்டுள்ளன. இவை தவிர, மேற்குப் பகுதியில் பசுபிக் கடற்கரை நகரங்களிலும் 10 அணுசக்தி நிலை யங்கள் உள்ளன. அமெரிக்காவின் உட்புற மாகாணங்களில் மட்டும் 64 அணுசக்தி நிலையங்கள் உள்ளன.

தற்போது மிசூரி நதி பெருக்கெடுத் துள்ளதால் நெப்ராஸ்கா பகுதியில் உள்ள அணைக்கட்டுகள் யாவுமே திறந்து விடப்பட்டுள்ளன. அதனால் நெப்ராஸ்காவில் இருக்கும் அணு உலைகள் நீரில் மூழ்கும் அபாயத்தை எதிர் நோக்கியுள்ளன. /போர்ட் கார்ள்ஹோன் என்ற ஒரு அணு உலை கடந்த 21 ஆம் திகதி தற்காலிகமாக மூடப்பட்டது. அணு உலையின் சில பகுதிகளை ஏலவே 2 அடி வெள்ளம் ஆக்கிரமித்து விட்டிருக்கிறது. மின்சார உபகரணங்கள் இருக்கும் பகுதியை அவசர காலச்சுவர் பாதுகாத்து வருகிறது.

நீர் மட்டம் பாதுகாப்பு மட்டத்தை விட உயர்ந்தால் அணு உலைகள் மூடப்படும் என அதிகாரிகள் தெரிவிக் கின்றனர். அத்துடன் இது வரை அணு உலைகளிலிருந்து சூழலுக்கு எந்த ஒரு கதிர்த்தொழிற்பாட்டுப் பதார்த்தங் களும் விடுவிக்கப்படவில்லை. ஆனால் இயற்கையைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் மனிதனுக்கில்லையே. ஆதலால் அணு உலைகளுடன் சம்பந்தப்பட்ட சகல துறையினரும் வானிலை ஆராய்ச்சி மையத்துடனான தொடர்பைப் பேணி வருகிறார்கள். வானிலை மாற்றம் தொடர்பில் உடனுக்குடன் அறிவுறுத் தப்படுகிறார்கள். அமெரிக்க இராணு வத்தின் பொறியியல் படையணி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த வருட ஆரம்பத்தில் ஜப்பான், புகுஷிமா அணு உலை அனர்த்தமும் அதனைத்தொடர்ந்து ஏற்பட்டு இன்றும் தொடர்ந்து வரும் சர்ச்சைகளும் உலக ளாவிய ரீதியிலே பெரும் விழிப்புணர் வைத் தோற்றுவித்துள்ளன எனலாம். சாதாரண மக்கள் மத்தியில் ஏற்பட்டி ருக்கும் இந்த விழிப்புணர்வு வெகுசனத் தொடர்பு ஊடகங்களுக்குக் கிடைத்த வெற்றி என்றால் கூட மிகையில்லை.

அந்த விழிப்புணர்வு தான் நெப்ரா ஸ்கா மக்கள் தொடுக்கும் கேள்விக் கணைகளின் பின்னணியிலும் இருக் கிறது. அணு உலைகள் இருக்கும் பகுதியில் நீர் மட்டம் உயர்ந்துள்ளதா என்று கேட்டே தமக்குப் பல தொலை பேசி அழைப்புகள் வந்து கொண்டிருப் பதாக சம்பத்தப்பட்ட அதிகாரிகள் கூறுகின்றனர். வெள்ளத்தைத் தடுப்ப தற்காய் மண் மூடைகள் அடுக்கப்படு கின்றன. ஆனால் அவை போதாது என ஆய்வாளர்களால் அறிவுறுத்தப்பட்டிருக் கின்றது. "போதுமான ளவு பாதுகாப்பு, முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டிருக்கின்றன. மேலதிக வெள்ளத்தடுப்பு கதவுகள் போடப்பட்டி ருக்கின்றன. ஆதலால் பயப்பட வேண்டிய தேவை இல்லை" என ஆய்வாளர்களு க்குப் பதிலளித்திருக்கிறது அதிகாரத் தரப்பு. பிரச்சினை யாதெனில், மிசு+ரி ஆற்றில் தற்போது உயர்ந்திருக்கும் நீர் மட்டம் ஓகஸ்ட் வரை குறையப் போவதில்லை என எதிர்வுகூறப்படுகிறது. பாதுகாப்புத் தடைகளும் இறப்பர் சுவர்களும் அணு உலைப்பகுதிக்குள் நீர் உட்புகுவதைத் தடுத்து வருகின்றன. ஆனால் இந்த நிலைமையின் எதிர் காலம் எதிர்வுகூறப்படமுடியாதது என்பதே யாவரும் அச்சம் கொள்வதற் கான காரணமாகும். அதேபோல நெப்ராஸ்காவில் அமைக்கப்பட்டிருக்கும் மற்றொரு அணு உலையான கூப்பர் உலையும் வெள்ள அபாயத்தால் பெரும் அச்சுறுத்தலை எதிர் நோக்கி யுள்ளது. அந்த அணு உலையின் தீயணைப்புப் பிரிவிலிருந்து மிசூரிநதி யிலே எண்ணெய்க்கழிவுகள் கலக்கவிடப் பட்டதாக அப்பகுதியின் சுற்றாடல் தர திணைக்களத்துக்கு அறிவுறுத்தப்பட்டி ருக்கிறது. அதாவது தீயணைப்புப் பிரிவையும் மிசு+ரி நதியையும் பிரிக்கும் தடைகள் வெள்ளத்தின் முன்னே செய லிழந்து போயின. எரிதலுக்குப் பாவிக் கப்படாத எண்ணெயும் ஏனைய கழிவு கள் கலந்த நீரும் மிசூரிநதியிலே கலக்கப்படுகின்றன. ஆனாலும் அவற்றில் கதிர்த்தொழிற்பாட்டுப்பதார்த்தங்கள் இல்லை எனக் கூறப்படுகிறது.

மிசூரி நதியிலே நீர் மட்டம் மேலும் உயர்ந்தால் கூப்பர் உலையையும் தற்காலிகமாக மூட வேண்டிய நிலை ஏற்படலாமென அச்சம் தெரிவிக்கின்ற னர் அதிகாரிகள்.

அமெரிக்க அணுக்கொள்கையைப் பொறுத்தவரையிலே அணு உலைகளின் பாதுகாப்புக்கான முக்கியத்தும் மிகவும் குறைவாகவே இருக்கிறது. என்று அணு உலை கட்டப்படுகிறதோ அன்றே அதனால் ஏற்படப்போகும் அழிவுக்கான வித்தும் இடப்படுகிறது எனலாம். நெப்ராஸ்காவிலிருக்கும் ஏதோ ஒரு அணு உலையிலே கசிவு ஏற்பட்டாலும் விளைவுகள் புகுஷிமா அணு உலைகளினதை ஒத்தவையாக இருக்கும் என எதிர்வு கூறப்படுகின்றன.

பூமியதிர்ச்சியால் புகுஷிமாவின் டாய் இச்சி அணு உலையில் கசிவு ஏற்படுவதற்கு 6 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்கசட்டவாளர்கள் உண்மையொன்றை உணர்ந்தனர். பூமியதிர்ச்சியால் அமெரிக்காவின் கிழக்கு பகுதியில் உள்ள அணு உலைகள் எதிர் நோக்கும் அச்சுறுத்த லானது எதிர்பார்த்ததை விட மிக அதிகமாகும் என்பதே அந்த உண்மை யாகும். இதையடுத்து அணுலைகளின் வடிவமைப்பை மாற்றியமைத்தல் தொடர்பாக ஆராய வேண்டுமென பொறியிலாளர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.

சட்டவாளர்கள் கண்டறிந்த உண்மை பொய்க்கவில்லை. அமெரிக்காவில் இல்லையாயினும் ஜப்பான், புகு'pமா விலே நி'ரூபிக்கப்பட்டது. புகுஷிமா அனர்த்தமானது எவரும் எதிர்பார்க்காதளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தமை நாம் யாவரும் அறிந்ததே. இவை இப்படியிருக்க, புகு'pமா அணூலை அனர்த்ததின் போது வெளியேறியே கதிர்த்தொழிற் பாட்டுத் தூசுகள் சில நாட்களிலேயே வட அமெரிக்காவைச்சென்றடந்தன என்ற புதியடோர் செய்தியும் தற்போது வெளியாகியுள்ளது. ஆனால் சம்பந்தப் பட்ட இரு அரசாங்கங்களும் இந்த உண்மையை மறைத்து விட்டன என WASHINGTON'S POST என்ற வலைப்பூ தெரிவிக்கிறது.

புகுஷிமா அணு உலை அனர்த்தம் நிகழ்ந்துகொண்டிருந்த காலப்பகுதியிலே பல்கலைக்கழக ஆய்வாளர்கள் பலர், கதிர்த்தொழிற்பாடுள்ள தூசுத்து ணிக்கைகளின் பரவல் தொடர்பாக எச்சரித்திருந்தனர். அத்துணிக்கைகள் வட அமெரிக்காவுக்கும் பின்னர் ஐரோப் பாவுக்கும் கூடப் பரவலாம் என்பது அவர்களது ஊகமாக இருந்தது.

ஜெட் விமானத்திலிருந்து வெளியேற்றப்படும் புகையை ஒத்ததாக இந்த தூசு துணிக்கைகளும் பசுபிக் சமுத்திரத்தைக் கடந்து பயணிக்கும் என்றனர். அது உண்மையே. நியூயோர் க்கில் தாக்கம் உணரப்பட்டது எனத் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், அக்கூற்று உறுதிப்படுத்தப்படவில்லை. ஜப்பானில் புகுஷிமா அணுஉலை அனர்த்தம் நிகழ்ந்த பின் உலகளாவிய ரீதியிலே பல நாடுகளிலும் எண்ணற்ற தரவுகள் சேகரிக்கப்பட்டு, அரசாங்கங்களிடையே பரிமாறப்பட்டன. ஆனால் அவை கல்வி யாளர்கள், ஆய்வாளர்கள் மத்தியிலோ பொதுமக்களிடமோ பகிரப்படவில்லை.

அணு ஆராய்ச்சி, அணுவுடன் தொடர்புடைய சகல விடயங்களிலும் இந்த நிலைமை தான் காணப்படுகிறது. அணுவுடன் தொடர்புடைய அனர்த்தமொன்று நிகழும் போது அதன் உண்மைப் பாதிப்புகள் வெளி உலகுக்குத்தெரியாமல் மறைக்கப்படுகின்றன.அணு உலைகளின் வடிவமைப்பு கூட இரகசியமாகவே பேணப்படுகிறது. இத்தகைய செயற்பாடுகளின் பின்னணியில் இராணுவ, அரசியல், பொருளாதார ரீதியான, பாதுகாப்புக் காரணங்கள் காணப்படுகின்றன. அத்தகைய காரணங்களின் முன்னே பொது மக்களின் நலன் என்பது செல்லாக் காசாகி விடுகிறது என்பதே நிதர்சனம்.


No comments:

Post a Comment