Friday, November 5, 2010

கிளிநொச்சி மண்ணை மேலும் வளமாக்க தயாராகிறது இரணைமடுக் குளம்


வெளிநாட்டு உதவிகள் எதுவுமேயின்றி மூன்றாம் வாய்க்கால் நீர்ப்பாசனத் திட்டம்


வீதியின் இருமருங்கிலும் பச்சைப் பசேலென்று வயல் வெளிகள்... வருடத்தின் பெரும் பகுதியில் நீர் சலசலத்துக்கொண்டிருக்கும் வாய்க்கால்கள்... இவை கிளி நொச்சிக்கேயுரித்தான தனி அடை யாளங்கள்.

கிளிநொச்சி என்றால் தனிக்காடு என்று இருந்த நிலையை மாற்றி ஒரு விவசாயப் பிரதேசமாக அது மாற்றப்பட்டதன் பின்னணியில் இரணைமடு நீர்ப்பாசனத் திட்டம் அமைந்திருப்பதை எவராலும் மறுக்கமுடியாது. ஏறத்தாழ 1902 ஆம் ஆண்டிலிருந்து இத்திட்டம் பல படிகளாக நடைமுறைப்படுத் தப்பட்டது.

இரணைமடுக் குளத்தின் மூலம் ஏறத்தாழ 8445 ஹெக்டயர் நிலப்பரப்புக்கு புவியீர்ப் பினாலான நீர்ப்பாசனத்தை மேற்கொள்ள முடியும்.

இரணைமடுக் குளத்துக்கு நீர் வழங்கும் ஒரேமூலம், கனகராயன் ஆற்றுப்படுக்கையா கும். இத்திடடம் கிளிநொச்சி மாவட்டத்தின் 40% விவசாய நீர்ப்பாசனத் தேவைகளுக்குப் போதுமானதாக இருக்கிறது. விவசாயத்தின் பிரதான பயிராக நெல் இருக்கின்ற போதும், உழுந்து, பயறு, கெளபி, மற்றும் மரக்கறி வகைகளும் பயிரிடப்படுகின்றன.

கடந்த மூன்று தசாப்த காலமாக இடம்பெற்ற கொடிய யுத்தம் கிளிநொச்சி மக்களின் இடம்பெயர் வுக்குக் கார ணமாகியது. அது மட்டுமன்றி, வேறு பிரதேச மக்கள் கிளிநொச்சிக்கு இடம் பெயரவும் வழிவகுத்தது. இத்தகைய தோர் நிலையில்லாத நிலைமையால் நீர்ப்பாசனத் திட்டங்களை ஒழுங்காக மதிப்பிட்டு கட்டுமாணங்களைப் பராமரிக்க முடியவில்லை. விளைவு, கட்டுமா னங்கள் சிதைவடைந்தன. அச்சிதைவுகள் மேலும் பல சிதை வுகளை உருவாக்கின. வாய்க்கால்கள் புதர்கள் மண்டித் தூர்ந்து போயின. அக்காலத்தில் இயலுமாக இருந்த பராமரிப்பு மட்டுமே மேற்கொள் ளப்பட்டது.

அதுமட்டுமன்றி கடந்த காலங்களில் வேறு பல பிரச்சினைகளும் காணப்பட்டன. விவசாயத்துக்குத் தேவையான விதை நெல், உரம், இரசாயனப் பதார்த்தங்கள் போன்றன போதியளவு கிடைக்கவில்லை. களஞ்சிய வசதிகள், சந்தைப்படுத்தல் தொடர்பான அறிவு மற்றும் மேம்படுத்தப்பட்ட விவசாய நடைமுறைகள், நீர் முகாமைத்துவ நடைமுறைகள் போன்றன பற்றிய தெளிவின்மை ஆகியனவும் காண ப்பட்டன.

அத்துடன் எந்த ஒரு ஆக்கபூர்வமான நடவடிக்கையையும் நடைமுறைப் படுத்துவதில் பல சிக்கல்கள் காணப்பட்டன.

இவை நீர்ப்பாசனத் திட்டங்களிலே பாரிய ஆதிக்கத்தைச் செலுத்தின. இதற்கு இரணைமடுத் திட்டம் ஒன்றும் விதிவிலக்கல்ல.

இப்பிரச்சினைகளுக்காக நீர்ப்பாசனத் திட்டம் முற்றாகக் குலைந்து போகக் கூடாது என்பதில் நீர்ப்பாசனத் திணைக்களமும் உறுதியாக இருந்தது. ஆகையால் இரணைமடுக் குளத்தின் நீர்வரத்து அதிகமாக இருக்கும் போது குளத்தின் முழு விநியோக மட்டத்தை விடக் குறைவான மட்டத்துக்கு நீர் வரத்து மட்டுப் படுத்தப்பட்டது.

குளக்கட்டு சேதப்படாத வண்ணம் வான் கதவுகள் திறந்து மூடப்பட்டன. அப்படி இருந்த போதும் சில இடங்களில் குளக்கட்டு அரிப்படைந்து சேதமடைந்ததைத் தவிர்க்க முடியாது போனது.

குளத்தின் இடது, வலது கரைகளிலே காணப்பட்ட துருசுகள் பூரணமாக மூடப்படமுடியாதனவாயின. அவசரக் கதவுகளும் அவற்றுடன் இணைந்த தொகுதிகளும் பழுது பார்க்க வேண்டிய நிலையில் இருந்தன.
வாய்க்கால்கள் அரிப்படைந்தன. களைகளாலும் புதர்களாலும் மூட ப்பட்டன. வாய்க்கால்களின் இடை யிடையே அமைந்திருக்கும் மதகுக் கதவுகளும் சேதமடைந்தே காண ப்பட்டன. வாய்க்கால்களையொட்டிக் காணப்பட்ட வீதிகளும் சேதமடைந்தே காணப்பட்டன.

இத்தகையதோர் நிலையில், யுத்தம் முடிவடைந்து மீள் குடியேற்ற நடவடிக்கைகளும் அபிவிருத்தித் திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டன. அவை இன்று ஒரு குறிப்பிடத்தகு நிலையை அடைந்திருப்பதை எவராலும் மறுக்கமுடியாது.
கிளிநொச்சி வாழ் மக்களில் பெரும்பாலானோர் விவசாயத்தையே தமது வாழ்வாதாரமாகக் கொண் டவர்கள். ஆதலால் அவர்கள் விவாசாயத்தை முன்னெடுப்பதற்கு நீர்ப்பாசனத் திட்டங்கள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் எனப்பல தரப்பினராலும் உணரப்பட்டது.

அதனடிப்படையில் இரணைமடு நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் அமையும் திருவையாறு நீர்ப்பாசனத் திட்டம் தெரிவு செய்யப்பட்டது. இரணை மடுக் குளத்தின் இடது கரையினால் வளம் பெறும் 3ம் வாய்க்காலின் நீர் கட்டுப்படுத்திகள் மற்றும் விழுத்திகளின் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக் கப்பட்டன. எந்தவித வெளிநாட்டு நிதி உதவியுமின்றி வடக்கு மாகாண சபைக்கான நிதி ஒதுக்கீட்டிலிருந்து கிளிநொச்சி நீர்ப்பாசனத் திணை க்களத்துக்கு வழங்கப்பட்ட நிதி இக்கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்டது.

மூன்றாம் வாய்க்காலானது திருவையாறு வட்டக்கச்சிப் பகுதியில் கோவிந்தன் கடைச்சந்தியில் இருந்து பூநகரியின் ஊரியான் வரையான பகுதி வரை செல்கிறது. அப்பகுதிகளில் இருக்கும் விவசாய நிலங்கள் 3ம் வாய்க்காலால் வளம் பெருகின்றன.
ஏறத்தாழ 38 மில்லியன் ரூபா மதிப்பீட்டில் கடந்த ஏப்ரல் மாதம் துரிதகதியிலே கட்டுமானப் பணிகளும் திருத்த வேலைகளும் ஆரம்பிக்கப்பட் டன. 3ம் வாய்க்காலுக்கான நீர் வரத்து முற்றாக நிறுத்தப்பட்டது. சிறு போகம் முடிந்து பெரும் போகம் தொடங்குவதற்கு இடைப்பட்ட காலம் தெரிவு செய்யப்பட்டமைக்கும் அதுவே காரணமாகும். பெரும்போக விதைப்புக்கு நீர்ப்பாசனம் அவசிய மில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது-

தற்போது பெரும்போக விதைப்பும் முடிவடைந்த நிலையில் 3ம் வாய்க்காலில் மேற்கொள் ளப்பட்ட கட்டுமானப் பணி களும் முடிவடைந்துவிட்டன. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் இரணைமடு நீர்ப்பாசனத் திட்டத்தின் உற்பத்தித் திறனை அதிகரித்தல் ஆகும். நீரின் முகாமைத்துவம் அதனுள் அடங்கிவிடுகிறது. அத்துடன் நீண்டகால நோக் கிலே இத்திட்டம் விவசாய அபிவிருத்தி சந்தைப்படுத்தல் வசதிகள், நன்னீர் மீன்வளர்ப்பு அபிவிருத்தி போன்றவற்றையும் உள்ளடக்குகிறது.

நீர்ப்பாசனக் கட்டமைப் புகளைப் புனரமைத்தல், அவற்றை இயக்குதல் மற்றும் பராமரித்தல் செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தல், இத்திட்டம் அமைந்திருக்கும் பகுதியின் அபிவிருத்தி வேலைகள் மற்றும் சிறு வீதி அபிவிருத்தி, நீர் விநியோகம் போன்ற விடயங்களும் இத்திட்டத்தினுள் அடங்குகின்றன.
முற்றாகப் பூரணப்படுத்தப்பட்ட 3ம் வாய்க்காலின் நீர்க்கட்டுப்படுத்திகள் நான்கும் நீர் விழுத்திகள் மூன்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவினால் நாளை அங்கு ரார்ப்பணம் செய்து வைக்கப்பட விருக்கின்றன.
இத்தகவல்களை கிளிநொச்சிப் பிராந்திய நீர்ப்பாசனப் பணிப்பாளர் சுதாகரன் எம்முடன் பகிர்ந்து கொண்டார். சுமார் 7500 ஏக்கர் சாகுபடிக்காக, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மிகவும் குறுகிய கால எல்லைக்குள் இத்திட்டம் பூரணப் படுத்தப்பட்டிருக்கிறது. அதன் பின்ன ணியில் தொழிற்பட்ட அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்களே!

இத்திட்டத்தின் பின்னரான பராமரிப்பு வேலைகள் காலத்துக்குக் காலம் கிரமமாக நடைபெற வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு நடைபெற்றால், இத்திட்டத்தால் வளம் பெறும் விவசாயப் பிரதேசங்க ளின் பயிர்ச்செறிவு மேலும் அதிகரிக்கும் என்பதில் எதுவித ஐயமுமில்லை.

No comments:

Post a Comment