Sunday, July 13, 2014

இது உயிரின் தொடர்ச்சி மட்டுமல்ல..... குழலியும் தொடர்கிறாள்...

இலங்கை நிர்வாக சேவையில் கால் பதித்து இற்றைக்கு இரண்டரை ஆண்டுகள் கடந்து விட்டன.. அதனோடு என் வலைப்பூவும் பொலிவிழந்து போய்விட்டதாய் மனதில் ஒரு சலனம்... வலைப்பூவில் பதிவேற்றுவதற்காய் விசைப்பலகையில் கை வைக்க முயன்று தோற்றுப்போன தருணங்கள் பற்பல.. எதேச்சையாய் திறந்து பார்த்தால் ஒரு மின்னஞ்சல்..

தேன் கூடு என்ற இந்திய வலைத்தளம் என்னை "இங்கு சாரதாஞ்சலி இடுகையிட்டிருக்கும் அனைத்துக் கட்டுரைகளும் அவரால் எழுதப்பட்டு ஏற்கனவே பத்திரிகைகளில் வெளியானவை. கண்ணைக் குளமாக்கிய மண்ணின் வாழ்வியல்-5, கற்பனை வளத்தை பெருக்கும் வாசிப்புத்திறன், இவ்விரண்டு கட்டுரைகளும் என்னைக் கவர்ந்தன. 'குழலி தொடர்வாள்' என்னும் ஒரு குறிப்போடு தொடராமல் நிற்கிறது வலைப்பூ." என எளிமையாய் அறிமுகப்படுத்தியிருந்தது.

அந்த அறிமுகத்தின் கடைசி வரிகள் வலைப்பூவுக்காய் என் கைகளை  விசைப்பலகையில் மீண்டும் பதிக்கச் செய்து விட்டன. என் பாதை உங்களில் பலர் பயணிக்க எண்ணியிராத பாதை. ஆயினும் அதில் நான் கண்டு பிரமிக்கும் விடயங்களை இந்த வலைப்பூவினூடாக உங்களுடன் பகிர எண்ணுகிறேன்.
குழலியின் பெயரால் சாரதாஞ்சலி மனோகரன்  மீண்டும் உயிர்க்கிறாள்...

இது உயிரின் தொடர்ச்சி மட்டுமல்ல.. என் வலைப்பூவின் உயிர்ப்பும் கூட...

1 comment:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

தொடருங்கள்....தொடருங்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Post a Comment