Thursday, July 15, 2010

சூழலியலில் செய்மதி தொழில்நுட்பம்

செய்மதித் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் வேகம் பிரமிக்கத்தக்கது. மறைந்த விஞ்ஞானி ஆதர் சி கிளாக்கின் விஞ்ஞான புனைகதையொன்றிலே கருவுற்று இன்று வானுயர்ந்த விருட்சமாக வளர்ந்து வருகிறது. செய்மதிகளின்றி உலகில்லையென்ற நிலையே இன்று காணப்படுகிறது.

ஆனால் இணைய வசதியுள்ள எந்த ஒரு நபரும் செய்மதித் தொழில் நுட்பத்தை உபயோகிக்க முடியுமென்ற விடயத்தைப் பலர் உணர்வதில்லை. 1980 களிலே 25 அங்குலம் X 25 அங்குலம் என்ற பரிமாணமுடைய சதுர அலகுகளை (pixels) அடிப்ப டையாகக் கொண்ட புகைப்படங்கள் செய்மதித் தொழில்நுட்பத்தின் மூலம் பெறப்பட்டன.

ஆனால் இன்றோ, 9 அங்குலம் X 9 அங்குலம் பரிமாணமுடைய சதுர அலகுகளை அடிப்படையாகக் கொண்ட செய்மதி மூலமான வான் புகைப்படங்கள் பெறப்படுமளவிற்கு செய்மதித் தொழில்நுட்பம் வளர்ச்சி கண்டுள்ளது.

சூழலியல் நோக்கிலும் செய்மதித் தொழில்நுட்பத்தின் பங்கு அளப்பரியது. முக்கியமாக காடுகள் அழிக்கப்படுதல் நிலங்கள் வரண்டு போதல் போன்ற சூழல் பிரச்சினைகளை இலகுவாக இனங்காண்பதற்கான அடிப்படையாகவும் செய்மதித் தொழில்நுட்பமே அமைந்து விடுகிறது.

வனப்பகுதிகளிலோ தோட்டங்களிலோ நோய்களின் பீடிப்பால் ஏற்படும் தாக்கத்தை இனங்காண்பதற்கும் இந்தச் செய்மதிப் புகைப்படங்களே துணைபுரிகின்றன. அடர்ந்த காடுகளில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத செயற்பாடுகளை இனங்காணவும் இந்தச் செய்மதிப் படங்கள் வழிவகுக்கின்றன.

சட்டவிரோத செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதை இனங்காணுமிடத்து அவை தொடர்பாகச் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறியத்தர வேண்டும். அவற்றை இனங்காண நாம் நேரடியாக அந்த இடத்துக்குச் செல்லத் தேவையில்லை.

செய்மதித் தொழில்நுட்பத்தின் மூலம் சம்பந்தப்பட்ட இடத்தைச் கண்காணிக்கக் கூடிய வசதியைச் செய்மதித் தொழில்நுட்பம் ஏற்படுத்தித் தந்திருக்கிறது. இணைய இணைப்பும் ஒரு கணனியும் இருந்தாலே எமது நாட்டின் வனப்பிராந்தியங்களுக்கு என்ன நடக்கிறது என்று அறிந்து கொள்ள முடியும். google இணையத்தளத்திலே இருக்கும் google earth என்ற மென்பொருளைத் தரவிறக்கி நீங்களும் முயன்று பாருங்களேன்.!

2 comments:

movithan said...

பயனுள்ள தகவல்.
comments Word Verification ஐ நீக்கிவிடவும்.

என்றும் அன்புடன், சாரதாஞ்சலி-ம said...

நன்றி சகோதரரே ...

Post a Comment