Monday, March 22, 2010

பாலைவனப் பிரதேசத்திலும் நீரை பெறக் கூடிய தொழில்நுட்பம்


வறண்ட உலர் வலயங்களைப் பொறு த்த வரையிலே, தூய நீரைப் பெறு தல் சற்றுக் கடினமானது. இத்தகைய தொரு நிலையில் நீர்மூலக் கூறுகளைக் கவர்ந்து பின்னர் அவற்றை விலக்கித் தள்ளக் கூடிய பல் பகுதியமொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இது நேர், மறை ஏற்றங்களையுடைய படைக ளையும் சிலிக்கா நனோத்துணிக்கைகளையும் கொண்டிருக்கும். இயற்கையாகவே ஐதரசன் நாட்டமுடைய பல் பகுதியங்கள் இணைக்கப் பட்டிருப்பதால் இப் பதார்த்தம் ஐதரசன் நாட்ட இயல்பைக் கொண்டிருக்கும். ஆதலால் நீர் மூலக் கூற்றை உறிஞ்சும்.

இப் பதார்த்தத்தின் கட்டமைப்பில் காணப்ப டும் மெழுகுத் தன்மையான சிலிக்கா படை, நீர் மூலக் கூறுகளை நீர்க்கோளங்களாக்கி, பதார்த்தத் தின் மேற் பரப்பில் உருளச் செய்யும். அவ்வாறு திரளும் நீரைச் சேகரிக்க முடியும். தூய நீருக்காக அல்லலுறும் சில நாடுகள் பெரியளவிலான பொலி புரொப்பிலீன் நார் வலைகளைப் பயன்படுத்தி வளிமண்டலத்தின் நீராவி மூலக் கூறுகளைச் சிறைப்படுத்தி நீரைப் பெறுகின்றன.

இம் முறையை விட, தற்போது கண்டுபிடிக்க ப்பட்டுள்ள இந்த புதிய முறையானது 10 மடங்கு வினைத்திறன் கூடியது. இப் புதிய பதார்த்தத்தா லான கூரைகளைப் பாவிது பாலைவனப் பிரதே சத்திலும் நீரைப் பெற முடியும்.

இந்தத் தொழில் நுட்பத்தின் இரசாயனம், ஐதரசன் நாட்டப் பகுதி யிலே பக்aரியாக் கொல்லியாகத் தொழிற்பட்டு தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்களை அழிக்கிறது. நீர் சேர்ந்த 4 நிமிடங்களுக்குள் பக்aரியா அழிந்து விட குடிப்பதற்குகந்த பாதுகாப்பான நீர் கிடைக்கும்.

No comments:

Post a Comment